ஈரோடு, ஏப். 12- புன்செய் புளியம்பட்டி நகராட்சி வாரச்சந்தையில் மாட்டிறைச்சிக் கடை நடத்த அமைச்சர் சு.முத்துசாமி உறுதியளித்ததைத் தொடர்ந்து தொடர் காத்திருப்புப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி முன்னெடுத்த போராட்டம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், வாழ்வாதாரத்தை மீட்டுக்கொடுத்த தலைவர்களுக்கு அருந்ததிய மக்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சியில், 26 ஏக்கர் நிலத்தில், வார சந்தை செயல்பட்டு வரு கிறது. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய சந்தையான இங்கு மாட்டுச் சந்தை உள்ளிட்டவை செயல்பட்டு வரு கிறது. இதில் கடந்த 50ஆண்டுகளுக்கும் மேலாக மாட்டிறைச்சிக் கடைகளும் செயல்பட்டு வந்தன. இந்த 13 கடை களும் கடந்த நவம்பர் மாதம் எவ்வித முன்னறிவிப்புமின்றி புல்டோசர் வைத்து இடித்து அகற்றப்பட்டன. இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீ்ண்டாமை ஒழிப்பு முன்னணியும் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தன.
இந்நிலையில் புதனன்று பிரச்ச னைக்கு தீர்வு காணும்வரை நகராட்சி அலுவலகத்தில் கால வரையற்ற குடியேறும் போராட்டம் அறி விக்கப்பட்டது. அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமை யில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் யு.கே.சிவஞானம், சிபிஎம் ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் திர ளானோர் பங்கேற்றனர். இதனை யடுத்து, தொடர்ந்து மூன்று கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களும், உறுதி யோடு போராட்டத்தை முன்னெடுக்கும் விதமாக, மதியம், இரவு உணவுகளை, நகராட்சி அலுவலக வளாகத்திலேயே தயாரித்து உண்டு போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில், பலசுற்றுபேச்சு வார்த்தை நடத்திய பின்னர், நகராட்சி ஆணையாளரும், நகர்மன்றத் தலை வரும் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். இதில், வியாழனன்று நகர்மன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்தி நகர்மன்ற எல்லைக்குள் மாட்டிறைச்சி கடைகளை நடத்துவதற்குரிய தீர்மா னத்தை வைத்து நிறைவேற்றுவது என்றும், கடைகள் கட்டி இந்த வியா பாரத்தில் ஈடுபட்டிருக்கக்கூடிய நபர் களுக்கு ஒப்படைப்பது என்றும் உறுதி யளித்தனர். ஆனால், கடைகளை கட்டித்தரும்வரையில், இறைச்சி விற்பனை நடத்திக் கொண்டிருந்த சந்தையில் தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என தலை வர்கள் வலியுறுத்தினர். இதற்கு அதிகாரி கள் தரப்பில் தயக்கம் தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தலைவர்களி டம் தொடர்பு கொண்டு பேசினார். இதில், வியாபாரத்தை ஏற்கனவே செய்து கொண்டிருந்த இடத்தில் தொடர்ந்து நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்கிறோம், இந்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை முடியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அமைச்சர் மற்றும் திமுவின் வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஆகி யோரின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை முடித்துக்கொண்டனர். நான்கு மாதங்களாக வாழ்வாதா ரத்தை இழந்து தவித்த அருந்ததிய மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாய் நின்று போராட்டக் களம் அமைத்து உரிமையை பெற்றுக் கொடுத்த நிகழ்வு அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வாழ்வாதா ரத்தை மீட்டுக்கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களிடம் இம்மக்கள் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.