சென்னை,ஜன.25- சென்னை திருவல்லிக் கேணியைச் சேர்ந்த பி.பாபு என்பவர் தாக்கல் செய்த மனுவில், தலைநகர் தில்லி ராஜபாதையில் நடக்கும் குடியரசு தின அணி வகுப்பில், தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்து ஒன்றிய அரசு உத்தர விட்டுள்ளதாகவும், அதனால் அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனு மதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று தெரி வித்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேச வலு அமர்வில் விசாரணை க்கு வந்த போது, அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்தது தமிழக மக்களின் உணர்வு களை புண்படுத்தியுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரி விக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அலங்கார ஊர்திக்கு அனுமதி கோரிய விண்ணப்பம் மற்றும், நிரா கரித்த உத்தரவு நகல் உள்ள தா என கேள்வி எழுப்பினர். இதற்கு, எழுத்துப்பூர்வ மான உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் முதல்வரும் இதை குறிப்பிட்டு கடிதம் அனுப்பி யுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அணி வகுப்பில் அலங்கார ஊர்தி க்கு அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பித்தது, நிராகரித்தது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. கடைசி நேரத்த்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் தலை யிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.