தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்காகப் போராடியவர்கள் கைது
முரளிதரன் கண்டனம்
புதுதில்லி, ஏப்.22 - தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்காக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானவர்களை அடக்கு முறையை ஏவி, ஜனநாயக விரோத மான முறையில் கைது செய்துள்ள தமிழ்நாடு அரசாங்கத்திற்கும், காவல் துறையினருக்கும் ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில் அவர் மேலும் கூறி யிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளின் உரிமை களுக்காக இயங்கிடும் தமிழ்நாடு அனைத்துவகையான மாற்றுத் திறனா ளிகள் சங்கம், அவர்களின் ஓய்வூதியத் தொகையை 6,000 ரூபாயிலிருந்து உயர்த்திட வேண்டும் என்றும், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் பதிவு செய்து உள்ள மாற்றுத்திறனாளிகள் அனை வருக்கும் வேலைகள் வழங்கிட வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளி களுக்காக தளர்த்தப்பட்டுள்ள பணி நேரத்தை அமல்படுத்திட வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளை வலி யுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தத் திட்டத்தின்கீழ் வேலை செய்திடும் மாற்றுத் திறனாளி களுக்கு 4 மணி நேரப் பணியிலிருந்து 8 மணிநேரம் வரை என்று உயர்த்தப் பட்டுள்ளது. போராட்டம் நடைபெறும் ஏப்.22 ஆம் தேதிக்கு முன்பாக, ஏப்.21 அன்றே பல மாவட்டங்களில் மாற்றுத்திறனாளி கள் அமைப்பின் மாவட்ட அளவிலான தலைவர்களில் பலர் மிகவும் மூர்க்கத் தனமாகவும், அடாவடித்தனமாகவும் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் மாநிலத் தலை நகரில் அணிதிரள்வதை நசுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பத்தா யிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் பொது பேருந்துகளில் ஏறுவதற்குத் தடை விதிக்கப்பட்டனர். பல இடங்களில் பேருந்தில் பயணம் செய்த மாற்றுத்திறனாளிகள் நடுவழி யிலேயே வலுக்கட்டாயமான முறை யில் இறக்கி விடப்பட்டுள்ளனர். செங்கல் பட்டு மற்றும் சென்னையில் மட்டும் மாற்றுத்திறனாளிகள் 20-க்கும் மேற் பட்ட இடங்களில் தடுத்து நிறுத்தப் பட்டு, அடைத்து வைக்கப்பட்டனர். இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருந் தது காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் நடந்துள்ளது. தமிழ்நாடு அரசும், காவல்துறையி னரும் மூர்க்கத்தனமாக நடந்துள்ள போதிலும் இவை அனைத்தையும் மீறி சுமார் எட்டாயிரம் மாற்றுத்திறனாளி கள் சென்னைக்கு வந்து தங்கள் கோரிக்கைகளுக்கான முழக்கங்களை வீராவேசத்துடன் முழங்கியுள்ளனர். சென்னையில் ஊனமுற்றோர் உரிமை களுக்கான தேசிய மேடையின் செயல் தலைவர் நம்புராஜன், துணைத் தலை வர் ஜான்சி ராணி, பொருளாளர் கே.ஆர். சக்ரவர்த்தி மற்றும் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் வில்சன் உள்ளிட்டோர் கைது செய்யப் பட்டுள்ளனர். நமது சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி கள், தமிழ்நாடு காவல்துறையினரால் இவ்வாறு நடத்தப்பட்டிருக்கும் செயல் முற்றிலும் கண்டிக்கத்தக்கதும், ஏற்றுக் கொள்ள முடியாததுமாகும். அமைதி யான போராட்டம் என்பது அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உள்ள உரிமையாகும். தமிழக அரசு உடனடியாக கைது செய்யப் பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க உத்தரவிட வேண்டும். மாற்றுத் திற னாளிகள் முன்வைத்துள்ள பிரச்சனை களைத் தீர்க்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி தலைவர்களு டன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். (ந.நி.)