சீர்காழி, மே 19-நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சின்னஆலாலசுந்தரம் கிராமம் உள்ளது. இங்கு 60 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நிலத்தடி நீர்உவர் நீராக மாறி விட்டதால், நிலத்தடி நீரை பயன்படுத்தமுடியவில்லை. கொள்ளிடம் கூட்டு குடிநீர்த்திட்டத்தின் மூலம் இங்கு வரும் குடிநீர் உரிய அளவு வந்து சேராததால்குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்குள்ளவர்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இங்கு உள்ள ஒரே ஒரு பம்பின் மூலம் வரும் சுகாதாரமற்ற நீரை குடிப்பதற்கும் குளிப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நீரைத் தொடர்ந்து பயன்படுத்தினால் சிறுநீரக கோளாறு ஏற்பட வாய்ப்பு உண்டு என்று மருத்துவர்களால் எச்சரிக்கப்பட்டு வருகிறது. எனவே சின்ன ஆலாலசுந்தரம் கிராமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கி, நிலத்தடி நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ், நிலத்தடி நீரை சுத்திகரிப்பு செய்து குடிநீர் வழங்க ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயச ங்கத் தலைவர் பாக்யராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.