tamilnadu

img

மக்களின் நாயகன் தோழர் கே.ஆர்.சுந்தரம்

 மக்களின் நாயகன்  தோழர் கே.ஆர்.சுந்தரம்

வேலூர் கோட்டை யும் செஞ்சிக் கோட்டையும் காலத்தால் அழியும் சின்னங்கள். கே. ஆர். சுந்தரம் போன்றவர்கள் ஏற்படுத்திய நினைவுச் சின்னங் கள் இயக்க வரலாற்றில் என்றும் அழியாதவை ”  இது தோழர் கே.ஆர்.எஸ் படத்திறப்பு விழாவில் அன்றைய சிபிஎம் மாநிலச்செயலாளர் தோழர் என். வரதராஜனின் புகழரை.  விடுதலைப் போராட்ட வீரராக, காங்கிரஸ்காரராக அந்நியத் துணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் சென்னைக்கு நடை பயணம் சென்ற தோழர் கே. ஆர். சுந்தரம் அங்கு கைது செய்யப்பட்டு சென் னை சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சென்னை சதி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த தோழர் பி.ராமமூர்த்தி, தோழர் எம்.ஆர். வெங்கட்ராமன் ஆகியோரின் தொ டர்பினால் கம்யூனிஸ்ட் ஆக மலர்ந்தார்.

வர்க்க அரசியல் புரிதல் ஏற்பட்டதால், காங்கிரஸ்காரராக சிறைக்குச் சென்றவர் கம்யூனிஸ் டாக வெளியே வந்தார்.  அவரது வாழ்நாளில் ஒன்பது ஆண்டுகள் சிறைவாசத்தையும் தடியடியையும் பிரிட்டிஷ் அரசு மட்டு மல்ல, விடுதலைக்குப் பின் காங்கி ரஸ் அரசும் அவருக்கு பரிசாகத் தந்தது. இந்த மாவட்டத்தில் மோட் டார் தொழிலாளர்கள், இன்ஜினிய ரிங் தொழிலாளர்கள், பீடி, கைத் தறி, பஞ்சாலை தொழிலாளர்களை திரட்டுவதில் அவரின் பங்கு மகத்தா னதாக இருந்தது.  

27 ஆண்டுகாலம் அவர் போட்டியிட்ட போதெல்லாம் வெற்றி பெற்று தாராபடவேடு பேரூராட்சி தலைவராக இருந்தவர். ஐந்து முறை சட்டமன்ற தேர்தலில் போட்டி யிட்டு, இரண்டு முறை வெற்றி பெற்று ஏழு ஆண்டு காலம் குடி யாத்தம் சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டார். அரசியல் விரோதி கள் கூட கைநீட்டி குற்றம் சொல்ல முடியாத தூய்மையான நேர்மை யான வாழ்க்கைக்குச்  சொந்தக் காரர் தோழர் கே.ஆர்.சுந்தரம்.   இந்த மாவட்ட செங்கொடி இயக்கத்தை கட்டி வளர்த்ததில் அவரது பணி அலாதியானது. சுமார் கால் நூற்றாண்டு காலம் கட்சியின் மாவட்டச் செயலாளராக, மாநிலக் குழு உறுப்பினராக செயல்பட்டவர். புதிய ஊழியர்களை கண்டெடுத்து தயார் செய்வதில் அவருக்கு நிகர் அவரே.  கருத்துகளை பக்குவமாகச் சொல்லி அனைவரையும் ஏற்க வைக்கும் அற்புதக் கலைக்குச் சொந்தக்காரர்.  

தனது 20 வயதில் பொது வாழ்க்கைக்கு வந்து சுமார் 60 ஆண்டு காலம் மக்கள் பணியே எனது பணி என பணியாற்றி மறை ந்த விடுதலைப் போராட்ட வீரர் கே. ஆர். சுந்தரம்.  வேலூர் மாவட்ட இயக்க வரலாற்றில் “கே ஆர் எஸ்” என்னும் மந்திரச்சொல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுக்கும் காந்தச் சொல்லாகவே இருக்கிறது.