tamilnadu

உலகச் செய்திகள்

பாலஸ்தீனப் பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் அரபு உலகத்தில் அமைதி நிலவாது என்று அரபு லீக்கின் பொதுச் செயலாளர் அகமது அபோல் கெய்ட் எச்சரித்துள்ளார். பல்லாண்டு காலமாக நடந்து வரும் இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண் டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், அரபு நாடுகளின் அந்நியத் தலையீடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றும்கோரியிருக்கிறார். 

ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உக்ரைனின் கோ ரிக்கையைப் பரிசீலனை செய்ய அந்த ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் முடிவு செய்துள்ளன.  27 நாடு களைக் கொண்ட ஒன்றியத்தில் உக்ரைன் சேர்வது பற்றி விவாதிக்கும் நேரத்தில், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கே முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான உர்சுலா வோன் டெர் லெயன் தெரி வித்துள்ளார். ஜார்ஜியா மற்றும் மோல்டோவா ஆகிய நாடுகளும் விண்ணப்பித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு 100 கோடி டாலர் நிதியுத வியை உலக வங்கி அளித்துள்ளது. ஆப்கானிஸ் தானுக்கு மனிதாபிமான ரீதியில் உதவுவதற்கான பல் வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அவற் றிற்கு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உலக வங்கி மூலம் நிதி பெற்று உதவின. தலிபான் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் இந்த நிதி முடக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நிதியிலிருந்து 100 கோடி டாலரை உலக வங்கி விடுவிக்கிறது.