இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா
வருவாய்த்துறை அமைச்சர் அறிவிப்பு
இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தெரி வித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானி யக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதங் களுக்கு பதிலளித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது: “கடந்த 4 ஆண்டுகளில் ரூ.20,365 கோடி மதிப்புள்ள 35,654 ஏக்கர் அரசு நிலங்களை கையகப்படுத்தி உள்ளோம். ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை, விமான நிலைய திட்டங் களுக்கு தேவையான நிலங்களை விரைவாக கையகப்படுத்தி கொடுத்து வருகிறோம். அந்த வகையில், மதுரை, தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு தேவையான நிலம் முழுவதும் கையகப்படுத்தி கொடுக்கப் பட்டுள்ளது. கோவை விமான நிலையத்துக்கு இதுவரை 468 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் ஒரு கோடியே 11 லட்சம் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடியே 11 லட்சம் பேருக்கு இ-பட்டா வழங்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் 13 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளோம். ஒரு கோடியே 11 லட்சம் பட்டா மாற்ற பணி செய்யப்பட்டுள்ளது”என்றார். 50 ஆயிரம் முதியோருக்கு ஓய்வூதியம் முதியோர் ஓய்வூதியத்தொகை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டதாக அதிமுக உறுப்பினர் குறிப்பிட்டார். முதியோர் ஓய்வூதியம் பெறு பவர்கள் மகளிர் உரிமை தொகை பெற முடி யாது. அந்த வகையில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களையும் முதியோர் ஓய்வூதியம் பெறுவோரின் விவரங்களையும் ஆய்வு செய்யும் பணி நடந்ததால்தான் ஜூலை மாதம் வழங்கப்படவில்லை. தற்போது தகுதியான பயனாளிகளுக்கு தொடர்ந்து முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக 9 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டுள்ளது. புதிதாக மேலும் 50 ஆயிரம் பேருக்கு முதி யோர் ஓய்வூதியத் தொகை வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பேரிடர் மேலாண்மை பாடம் அறிமுகம்
இதைத் தொடர்ந்து புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர், “நவீன முறையில் நில அளவை பணிகளை மேற்கொள்ள 454 நில அளவை பணியாளர்களுக்கு ரூ.27.24 கோடி மதிப்பீட்டில் டிஜிபிஎஸ் ரோவர்ஸ் கருவிகள் வழங்கப்படும். மேலும், இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தை விரைவாக மேற்கொள்ள வசதியாக 3078 நில அளவை பணியாளர்களுக்கு ரூ.15.6 கோடி செலவில் மடிக்கணினி வழங்கப்படும். அரசின் திட்டங்கள் பொதுமக்களை விரைவாக சென்றடையும் வகையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி புரம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட 17 மாவட்டங்களில் 50 புதிய வருவாய் குறு வட்டங்களும் (பிர்க்கா), செங்கல்பட்டு, சேலம், கோவை, மதுரை, திருச்சி திருநெல் வேலி உள்பட 8 மாவட்டங்களில் 25 புதிய வருவாய் கிராமங்கள் உருவாக்கப்படும். தாலுகா அளவில் வருவாய்த்துறையின் நிர்வாகத்தை வலுப்படுத்தி பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கும் வகையில் புதிதாக 26 துணை வட்டாட்சியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.கல்லூரிகளில் இளங்கலை பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை பாடம் அறிமுகப் படுத்தப்படும். பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள பேரிடர் மேலாண்மை பாடத்திட்டம் மேம்படுத்தப்படும் என்று கூறினார்.