tamilnadu

img

பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தமிழ்வழி மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு

பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தமிழ்வழி மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் வழங்குகிறது.

தமிழ்வழியில் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நல்ல முதுகலை பாடத்திட்டங்களை புதிய சலுகைகளோடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வழங்கவிருக்கிறது. இந்த கல்வி ஆண்டிலிருந்து அறிமுகப் படுத்தப்படும் இந்த பாடத்திட்டங்கள் ப்ளஸ் டு தேர்ச்சியிலிருந்து நேரடியாக ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டங்களாகும். முதுகலை கணிதம், முதுகலை இயற்பியல், முதுகலை வேதியல், முதுகலை எலக்ட்ரானிக் மீடியா, முதுகலை பயோடெக்னாலஜி, முதுகலை கடல்அறிவியல், முதுகலை சுற்றுச்சூழல் அறிவியல், முதுகலை வணிகவியல் போன்ற முதுகலை பட்டப்படிப்பிற்கான இவைகளின் சேர்க்கை நுழைவுத் தேர்வு இன்றி 6.5.2019 அன்று நடைபெறவிருக்கும் நேரடி கலந்தாய்வில் நடைபெறும். இப்பட்டப்படிப்புகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 3.5.2019 ஆகும். இந்த முதுகலை படிப்புகளின் கட்டணங்கள் இதர விபரங்கள் விண்ணப்பங்கள் www.msuniv.ac.in - என்ற பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் கி்டைக்கும். இணையத்திலேயே நேரடியாக பதிவேற்றத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த  முதுகலை ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலை பட்டப்படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களில் முதல் பத்து மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் மாதம்தோறும் ரூ.2000 ஊக்கத்தொகை ஐந்தாண்டுக்கு அளிக்கப்படும். இந்த முதுகலை பட்டப்படிப்புகளின் சிறப்புகளில் மிக முக்கியமானவை சிறந்த நூலக வசதி, குறைந்த கட்டணம் கல்லூரிக்கு செல்லாமலேயே பல்கலைக்கழகத்தில் முதுகலை உயர்கல்வியை பெறலாம். இயற்பியல் கணிதம் வேதியல் கடல் சார் அறிவியல் எலக்ட்ரானிக் மீடியா போன்ற முதுகலை பட்டங்கள் என்றும் மாறாத மதிப்புமிக்க வேலைவாய்ப்புகளை வழங்கும் கலைப் பாடத்திட்டங்களாகும். பொறியியல் படிக்க வசதியில்லாத நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் நீட் தேர்விற்கு செல்ல முடியாத ஏழை கிராமப்புற தமிழ்வழி மாணவர்களுக்கு இந்த முதுகலை கல்வித் திட்டம் ஒரு நல்ல வாய்ப்பாக நாம் கருதலாம்.


;