சு.வெங்கடேசன் எம்.பி., வலியுறுத்தல்
மதுரை, ஜன.5- மதுரை -தூத்துக்குடி புதிய வழித்தடத் திற்கு ரயில்வே அமைச்சகம் விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழு கூட்டத் தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்துக்கான ரயில்வே நிலைக் குழுக்கூட்டம் ஜனவரி 5 அன்று மதுரையில் நடந்தது. கூட்டத்திற்கு நிலைக்குழு தலைவர் நாடா ளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தென்னக ரயில்வேயின் புதிய ரயில் பாதை திட்டங்கள், தற்போது நடைபெற்று வரும் அகல ரயில் பாதை பணிகள், இரட்டை இரயில் பாதை பணிகள், மின்மயமாக்கல் ஆகி யவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரூக் அப்துல்லா, கெளசலேந்திர குமார், ராய், சந்தராணி முர்மு, ரமேஷ் சந்தர் கௌசிக், நர்ஹரி அமின், புலோ தேவி நேடம், சுமர்சிங் சோலங்கி, அஜித் குமார் புயன், கிரு மஹ்டோ, கொடிகுன்னில் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.சிறப்பு அழைப்பாளராக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டார். நிலைக்குழுவின் கவனத்துக்கு சு.வெங்க டேசன் எம்.பி., கீழ்க்கண்ட திட்டங்களை கொண்டு சென்றார்.
“மதுரை -தூத்துக்குடிக்கான புதிய ரயில்வே விரிவாக்கத்திட்டம் ரூ.2053 கோடி யில் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு சமர்ப் பிக்கப்பட்டுவிட்டது. இதற்கு ரயில்வே அமைச் சகம் அனுமதி வழங்க வேண்டும். வாஞ்சி மணியாச்சி- நாகர்கோவில்; கன்னி யாகுமரி- திருவனந்தபுரம் பிரிவுகளில் மின்சார மயத்துடன் கூடிய ரெட்டைப்பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். முதலில் 2022 ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் இந்த திட்டங்கள் முடிவடையும் என்று ஒன்றிய அமைச்சரவை முடிவு செய்தது .ஆனால் நிதி ஒதுக்கீடு போது மானதாக இல்லாததால் இது மேலும் மூன் றாண்டுகள் பிடிக்கும் என்று தெரிகிறது. இந்த ரெட்டை பாதை திட்டத்தின் முக்கியத்துவத்தை கருதி விரைந்து போதிய நிதி ஒதுக்கி இந்த திட்டத்தை முடிக்க வேண்டும். கூடல்நகர் மதுரையில் இரண்டாவது முனை யமாக தயார் செய்ய வேண்டும். அனைத்து ரயில்களும் கூடல் நகரில் நின்று செல்ல வேண்டும். இதன் மூலம் மதுரை சந்திப்பின் நெருக்கடியை தீர்க்க வேண்டும்” ஆகிய வற்றை நிலைக்குழுவின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இக்கூட்டத்தில் நாடாளுமன்ற செயலக இயக்குனர் மாயா லிங்கி, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங், ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் முதன்மை திட்ட மேலாளர் கமலா கர ரெட்டி, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோர் கலந்து கொண் டனர்.