போளூர், மார்ச் 1- ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என அரசுப் பள்ளி ஆசிரியை மாணவியை கண்டித்ததால் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர் கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரு கின்றனர். இந்நிலையில் பள்ளி ஆசிரியை லட்சுமி என்பவர் `ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி யை கண்டித்ததால் மாணவியின் பெற்றோர் கள் மற்றும் உறவினர்கள் ஒன்றிணைந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளி வளா கத்தை முற்றுகையிட்டனர் . கடந்த 15 தினங்களுக்கு முன்பு இது போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றதாகவும், அதற்கு பள்ளி சார்பில் மன்னிப்பு தெரிவித்த தாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடை பெற்றதால் பெற்றோர்கள், உறவினர்கள் ஒன்று திரண்டு புதிதாக செவ்வாயன்று பொறு ப்பேற்ற தலைமையாசிரியர் சுதாவிடம் சண்டையிட்டனர். பின்பு தலைமையாசிரியர் சுதா முற்றுகை யில் ஈடுபட்ட மாணவியின் பெற்றோர், உறவி னர்களிடம் இதுபோன்ற சம்பவங்கள் இனி மேல் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்வதாக மன்னிப்பு கேட்டதின் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்திற்கு பள்ளி ஆசி ரியை மற்றும் மாணவிகளிடம் விசாரணை செய்து முழுமையான அறிக்கையை பெற்றோர்களுக்கு தெரிவிக்கவும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஆசிரியை மீது ஏதேனும் தவறு இருந்தால் அனைத்து பெற்றோர்க ளும் ஒன்று கூடி மாபெரும் போராட்டம் நடத்து வோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.