tamilnadu

img

ஊராட்சிச் செயலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

சென்னை, மே 15- தமிழ்நாடு ஊராட்சிச் செயலாளர் கள் சங்கத்தின் சார்பாக சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. ஊராட்சிச் செயலர் காலி பணி யிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும். கருவூலம் மூலம் ஊராட்சிச் செயலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். பணி வரன் முறை செய்ய வேண்டும் என்ற  கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் விடுப்பு எடுத்துவிட்டு ஊராட்சி செயலாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழ்நாடு முழுவதும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டம் குறித்து சங்கத்தின் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் கூறியதாவது:- நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யும் விதமாக பல்வேறு சட்டத் திருத்தங்களை முதலமைச்சர் கொண்டுவந்துள்ளார். அரசு பணி யாளர் தேர்வாணையம் மூலம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் போது படித்த ஏழை மாணவர்கள் அரசு பணிக்கு வர வாய்ப்பு உள்ளது. ஊராட்சி செயலாளர்களை அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். எங்கள் கோரிக்கை களையும் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். 5 நாட்கள் இந்த போராட்டம் கட்டாயம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.