tamilnadu

img

பரந்தூர் விமான நிலையம் : மக்கள் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்

செங்கல்பட்டு, ஜன. 23- பரந்தூர் விமான நிலை யம் அமைப்பது குறித்து  பொதுமக்களின் உணர்வு களுக்கு ஒன்றிய மாநில அரசு கள் மதிப்பளிக்க  வேண்டும் எனத் தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண் முகம் கூறியுள்ளார். சென்னை இரண்டாவது விமான நிலையம் காஞ்சி புரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படும் என ஒன்றிய மாநில அரசு கள் அறிவித்தன.  இதற்காக  பரந்தூர், கொடவூர், வளந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 4700 ஏக்கர் நிலம் எடுக்க  உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில்  இந்த 4700 ஏக்கர் நிலத்தில் 3500 ஏக்கர் நிலம் விவசாய நிலமாகவும்,  1000 ஏக்கர் நிலம் நீர்நிலைகளாகவும், சுமார் 350 ஏக்கர் நிலம் மட்டுமே அரசு நிலம் இருப்ப தாகவும் அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த நிலத்திற்குள் சுமார்  10க்கும் மேற்பட்ட ஏரிகள்  இருப்பதாகவும் பாலாற்றில் இருந்து திருப்பெரும் புதூர் வரை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பல்ல வர்களால் வெட்டப்பட்ட கம்பன் கால்வாய் 45 கி.மீ செல்வதாகவும் தெரிவித்துள்ளனர். இதே போன்று அப்பகுதியில் உள்ள வெள்ளோடை ஆறு  பல கிராமங்களின் ஏரிகளின்  உபரி நீர் செல்லும் ஆறாக வும் பல கிராமங்களைச் செழிப்பாக விவசாயம் செய்திட ஏதுவாக இருப்ப தாகவும் தெரிவித்து வருகின்றனர்.

முப்போகம் விளையும் இப்பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பல கோயில்களும் இருப்ப தாக அப்பகுதி மக்கள் தெரி வித்துள்ளனர்.  தங்களது கோரிக்கைகளை வலியு றுத்தி  கடந்த 180 நாட்க ளுக்கு மேலாக   தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விமான நிலையத்தால் பாதிக்கப்படும் ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த  விவசாயிகள் மற்றும்  பொது மக்களை ஞாயிறன்று (ஜன.21) பெ.சண்முகம் சந்தித்துப் பின்னர் செய்தி யாளர்களிடம்  கூறியதா வது: பரந்தூர் விமான நிலை யம் அமைப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் கடந்த 6 மாதங்களாகத் தொடர்ச் சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது குடியிருப்பு, விவசாய நிலம் அனைத்தும் பாதிக்கப்படுகிறது  என்ற நிலையில்  கடுமையான எதிர்ப்பை அப்பகுதி மக்கள் தெரிவித்து வரு கின்றனர்.  பரந்தூர் விமான  நிலைய பணிகள் துவங்கப் படவில்லை. ஆனால் பணி கள் முடிந்து விமானங்கள் பறந்து கொண்டிருப்பது போல  தமிழ்நாடு அரசின் அணுகுமுறை இருப்பது எந்த வகையிலும் ஏற்பதற் கில்லை.

இப்பகுதியில் உள்ள சாதாரண மக்கள் சுமூக மான முறையில் வாழ்வ தற்கான நிலை இல்லை. ஒரு பதற்றத்தை ஏற்படுத் தும் நிலையில் தமிழ்நாடு அரசின் நிலை இருந்து வரு கின்றது. முதலில் அரசு  இப்பகுதியில் உள்ள  பாதுகாப்பு வளையத்தை யும் காவல் துறையினரை யும் திரும்பப் பெற வேண்டும். இப்பகுதி மக்கள் இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கு அரசு நடவ டிக்கை எடுத்திட வேண்டும். எந்தவித திட்டத்தையும் அரசு நடைமுறைப்படுத்தினாலும் அதற்கான சட்ட வழிமுறை கள் உள்ளன. நிலம் கையகப்படுத்து தல் மற்றும் மறுவாழ்வு மறு குடியமர்த்துதல் சட்டம் 2013 ன் படி அரசு நடந்து கொள்ள வேண்டும். மாறாக காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரை வைத்து பொதுமக்களை மிரட்டக்கூடாது. விமான நிலையத்தைப் பொறுத்த வரையில் பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அரசு இதுகுறித்து மறுபரிசீலனை செய்திட வேண்டும். தற்போது உள்ள விமான நிலையங்கள் அனைத்தையும்  ஒன்றிய அரசு   தனியாருக்குத் தாரை  வார்த்து வரும் நிலையில் இந்த விமான நிலையம் அமைந்தால் அது அரசிடம்  இருக்குமா என பொது மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது. 

தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடித்துச் செல்வதற்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயிகளின் நிலம்  கொடுக்கவேண்டுமா என்ற நியாயமான கேள்வி எழுந்துள்ளது. இதைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. பொதுமக்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த வகையிலும் விமான நிலைய திட்டத்தை அரசு செயல்படுத்தக்கூடாது எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கி றது.  மேலும் வாழ்வாதாரத் திற்காகத் தொடர்ந்து போராடும் இப்பகுதி மக்களுக்குத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எப்போதும் துணை நிற்கும்.  மேலும் பரந்தூர் விமான நிலையம் குறித்து இப்பகுதி மக்களின் கோரிக்கை களைத் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் தமிழ்நாடு முதல்  அமைச்சரிடம் கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் என்.ரங்கன், மாவட்டச் செய லாளர் கே.நேரு, தென் சென்னை மாவட்டச்  செயலாளர் சந்திரன்,  மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், மாவட்டத் தலைவர் செல்வம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் கார்த்திக், மாவட்டப் பொருளாளர் சுகந்தன், மார்க்சிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயலாளர் சி.சங்கர், மாநகர செய லாளர் ஸ்ரீதர்,  வட்டச் செய லாளர் பழனி, நிர்வாகி கள் வசந்தா, சிவப்பிரகா சம் உள்ளிட்ட பலர் பேட்டி யின்போது  உடனிருந்தனர்.