tamilnadu

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுவதற்கு முன்பு பரிசோதனை செய்யப்படுகிறதா? உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை, மார்ச் 12- தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படு வதற்கு முன்பாக முறையாக பரிசோதனை கள் மேற்கொள்ளப்படுகிறதா? என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி யுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வ ரத்தைச் சேர்ந்த கணேசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,” கருவுற்றிருந்த எனது மனைவி ருக்மணியை பரிசோத னைக்காக கன்னியாகுமரி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கிருக்கும் பெண் மருத்துவர் கருவைக் கலைத்து குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ளுமாறு கூறினார். கடந்த 2011 மார்ச் 19ல் எனது மனைவியின் கரு வைக் கலைத்து குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த போது, கவனக்குறைவாக ஆக்சிஜனுக்கு பதிலாக நைட்ரஜன் ஆக்சைடு வாயுவை அதிகமாக ஏற்றியுள்ள னர். என் மனைவியின் உடல்நிலை மோச மானதால், வேறு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கலாம் என டிஸ்சார்ஜ் செய்ய கூறிய போது, தங்களது தவறினை மறைப்பதற்காக டிஸ்சார்ஜ் செய்ய மறுத்து விட்டனர். இதனால் கோமா நிலைக்கு சென்ற எனது மனைவியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்த நிலை யில், அவர்களும் தங்களது துறை சார்ந்த வர்களை காக்கும் வகையில் சரியான தக வல்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை யில் மனு செய்ததன் அடிப்படையில், வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் என் மனை விக்கு சிகிச்சை அளிக்க கொண்டு சென்ற போது, மிகவும் தாமதமாக கொண்டு வந்தி ருப்பதாகவும், நீதிமன்ற உத்தரவினை மதித்து சிகிச்சைக்காக அனுமதிப்பதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 2012 மே 4ஆம் தேதி எனது மனைவி உயி ரிழந்தார். எனவே எனது மனைவியின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நட வடிக்கை எடுப்பதுடன், எனது குடும்பத்திற்கு ஏற்பட்ட விலை மதிக்கமுடியாத இழப்பிற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” எனவும் குறிப்பிட்டிருந்தார்.  இந்த மனுவை புதனன்று விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக ஏதேனும் நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? பாதிக் கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு ஏதும் வழங்கப்பட்டுள்ளதா? தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படு வதற்கு முன்பாக முறையாக பரிசோத னைகள் மேற்கொள்ளப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

;