சென்னை,ஜன.7- மைசூருவில் வைக்கப்பட் டுள்ள தமிழ் கல்வெட்டுகள் அனைத்தையும், சென்னைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று இந்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட தமிழக கல் வெட்டுகள், நினைவுச் சின்னங்கள், உதகைக்கு மாற்றப்பட்டு அதன் பின் கடந்த 1966ஆம் ஆண்டு மைசூரு கல்வெட்டியல் அலுவ லகத்திற்கு கொண்டு செல்லப் பட்டன. அங்கு தமிழ் கல்வெட்டு கள் முறையாக பராமரிக்கப் படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இதையடுத்து மைசூரு வில் உள்ள தமிழ்க் கல்வெட்டுக ளை சென்னைக்கு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. அதன்படி, தமிழ் சார்ந்த கல்வெட்டுகள் அனைத் தும் இனி தமிழகத்திற்கே இட மாற்றம் செய்ய வேண்டும் என் றும் இந்திய தொல்லியல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இதுவரை துணைக் கல்வெட்டு கண்காணிப்பா ளர்கள் அலுவலகம் தென்சரகம் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், இனி ‘தமிழ்க் கல் வெட்டுகள் துணை கண்காணிப் பாளர்கள் அலுவலகம்’ என அழைக்கப்படும் என்றும் தொல் லியல்துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல் லியல் துறையினர் உத்தரவுக்கு தமிழக தொல்லியல் ஆர்வலர் கள் மற்றும் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.