சென்னை, மார்ச் 4 - 18 வயது பூர்த்தியாகாத சிறார்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க உரிய நடவடிக் கைகளை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை தி. நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் மீது ஆட்டோ மோதியது. இதில் காயமடைந்த சிறுவன் 4 நாள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி னார். விபத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனு க்கு இழப்பீடு வழங்க நியூ இந்தியா அஷ்யூ ரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடக்கோரி மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மோட்டார் வாகன சட்டத்திற்கு முரணாக 18 வயது பூர்த்தியாகாத மைனர் சிறுவன் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து என்பதால், இழப்பீடு வழங்க மறுத்து மனுவை நிராகரித்தது. இதை எதிர்த்தும்,7 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரியும் சென்னை நீதிமன்றத் தில் சிறுவன் தரப்பில் வழக்கு தொடர ப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். கண்ணம்மாள், இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்தார். மோட்டார் வாகன சட்டப்படி 18 வயதுக்குக் குறைவா னவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.