சென்னை,ஜன.25- நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக் கால தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் திருத்தப்பட்ட ஓ.எம். ஆர். விடைத்தாள்களை தேசிய தேர்வு முகமை கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 5 அன்று இணையதளத்தில் வெளி யிட்டது. அப்போது, 700-க்கு 594 மதிப்பெண்கள் பெற்ற தாக காட்டிய நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி திடீரென தன் மதிப்பெண்களை 248 ஆக குறைத்து மற்றொரு ஓ.எம். ஆர். வெளியிடப்பட்டதாகக் கூறி கோயம்புத்தூரை சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 594 மதிப்பெண் என்ற புகைப்பட ஆதாரங்கள் மாண வன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இதுசம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பிரதிநிதி கள் அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவை அமைத்து விசாரிக்க கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக, சைபர் குற்ற வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை நியமித்து விசாரிக்க சிபிசிஐடிக்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தேசிய தேர்வு முகமை, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில் ஓ.எம்.ஆர். விடைத்தாளில் மதிப்பெண் குளறுபடி குறித்து ஒன்றிய அரசே விசாரித்துவரும் நிலையில், சிபிசிஐடி விசா ரணை தேவையற்றது என்றும் அதனால் தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த பரேஷ்உபாத்யா, சத்தி குமார் குரூப் அமர்வு ஏற்கனவே சிபிசிஐடி விசாரணைக்கு இடைக் கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் பரேஷ்உபாத்யா, சத்தி குமார் குரூப் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை தனி நீதிபதியே மீண்டும் விசாரித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட னர். ஏற்கனவே சிபிசிஐடி விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுவிட்ட நிலையில் தனி நீதிபதி விசாரணை முடியும் வரை அந்த தடை தொடரும் என்றும் உத்தரவிட்ட னர்.