tamilnadu

கூட்டுறவுத்துறை மூலம் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை மையம் திறப்பு

 

மதுரை, ஜன.19- மதுரை  திருமங்கலம் ஜவஹர் நகரில் மதுரை மாவட்ட பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் இந்தியன் ஆயில் கழகம் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை மையத்தை  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ, வரு வாய், பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சனி யன்று தொடங்கி வைத்தனர்.  நிகழ்விற்கு ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித் தார்.  நிகழ்வில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, கூட்டு றவுத்துறையின் மூலம் செயல்படுத்தப் பட்டு வரும் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையம் தரமான பெட்ரோல், டீசல் விற்பனை செய்து வருகிறது. இது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள் ளது.  பாண்டியன் கூட்டுறவு பண்டக சாலை யின் மூலம் பழநியில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை மையம் டிச.18-ஆம் தேதி தொடங்கப்பட்டு சிறப்பாக செயல் பட்டு வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் 37 கூட்டுறவு பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட் டுள்ளன. மேலும் 10 கூட்டுறவு பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யபட்டு வரு கிறது என்றார்.

;