திருப்பூர், ஜன. 28- நூல் மற்றும் பருத்தி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக தொழில் துறை யினர் மற்றும் தமிழக அரசு பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தை வியாழக்கிழமை பிற்பகல் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் ஏற்பாடு செய்திருந்தார். இக்கூட்டத் தில் நிர்மலா சீதாராமன் உடன் மாநில கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஆர்.காந்தி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, மாநில கைத்தறித் துறை முதன்மைச் செயலாளர் டி.பி.யாதவ், ஜவுளித் துறை ஆணையர் வள்ளலார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கலந்து கொண்டு பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்,
பஞ்சு இறக்குமதி வரியை நீக்க வேண்டும். விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்துவதுடன், தொழில் துறைக்கும் நியாயமான விலையில் பஞ்சு, நூல் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். செயற்கை பற்றாக்குறை ஏற்படுவதற்கு வழி வகுக்கும் பங்குச்சந்தையில் பருத்தியை சரக்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி னார். இக்கூட்டத்தில் பேசிய தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி, திருச்சி சிவா எம்பி ஆகியோரும், பஞ்சுக்கு 11 சதவிகித இறக்குமதி வரியை நீக்க வேண்டும், முன்பேர வர்த்தகத்தில் இருந்தும் பருத்தியை நீக்க வேண்டும்,
இந்திய பருத்தி கழகத்தின் மூலமாக பருத்தி விலையைத் தீர்மானிக்கும் நடைமுறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தினர். எனினும் இந்த விஷயத்தில் இறக்குமதி வரியை நீக்கினால் விவசாயிகள் மீது தாக்கம் செலுத்தும் என்று நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். இதன் மூலம் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பருத்தி மீதான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு நீக்கு வதற்கு தயாராக இல்லை என்று தெரிய வருகிறது. அதேசமயம் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அமைச்சர் மற்றும் தொழில்துறை பிரதி நிதிகள் இந்த கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தியதால், கோரிக்கை மனுவை உடனடியாக அனுப்பி வைக்கும்படி நிர்மலா சீதாராமன் கூறியதாகவும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பங்குச்சந்தையின் சரக்கு பட்டியலில் இருந்து பருத்தியை நீக்க வேண்டும் என்று தொழில்துறையினர் கோரிக்கை வைத்து வரும் நிலையில், அதை சரக்கு பட்டியலில் இருந்து நீக்கக்கூடாது என்று பங்குச் சந்தை யில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சக்திகள் முயற்சி செய்வதாகவும் தொழில்துறை வட்டா ரத்தினர் கவலையோடு தெரிவித்தனர்.