tamilnadu

வேகமாக பரவும் ஒமைக்ரான்: பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் ஆன்லைன் வகுப்பு

சென்னை,டிச.27- ஒமைக்ரான் வைரஸ் 5 மடங்கு வேகத் தில் பரவக்கூடிய தன்மை உள்ளதால் கடைகள், பொது இடங்களில் முகக்க வசம் அணிவதை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் ஆலோசனை வழங்கி உள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவுவதால் கட்டுப் பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு  மருத்துவர்கள் சங்கம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் மருத்துவர் செந்தில் கூறியதாவது:- ஒமைக்ரான் வேகமாக பரவக்கூடிய வைரசாக இருப்பதால் தொடக்கத்திலேயே சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தால் தொற்று பாதிப்பு அதிகமாவதை தடுக்க முடியும். பள்ளிகளுக்கு குழந்தைகள் நேரடியாக வகுப்புக்கு செல்வதால் அதன் மூலம் இவ்வகை வைரஸ் பெற்றோர் களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது.

சளி, இருமலுடன் மாணவர்கள் வகுப்புக்கு செல்வதை தடுக்க முடியாது. அவர்கள் மூலம் வீட்டில் உள்ளவர்களுக்கு பரவக்கூடும். அதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த அரசு பரிசீ லனை செய்ய வேண்டும். திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட பல்வேறு விழா கொண்டாட் டங்கள், இறப்பு  நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடுவதை கட்டுப் ்படுத்த வேண்டும். முகக்கவசம் அணி யாமல் கூடுவதால் தொற்று வேகமாக பரவும். பொதுமக்கள் அதிகம் கூடக் கூடிய தியேட்டர், மால்கள், பொழுது  போக்கு மையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். ஒரே நேரத்தில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படு வதை தவிர்க்க இப்போதே ஒருசில கட்டுப் பாடுகளை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.