tamilnadu

img

திருச்சியில் சர்வதேச தரத்துடன் ஒலிம்பிக் அகாடமி : மு.க.ஸ்டாலின்

திருச்சிராப்பள்ளி, டிச.29- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டம் தோறும் நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய திட்டங் களுக்கு அடிக்கல் நாட்டி வரு கிறார். திருச்சியில் வியாழனன்று 3 இடங்களில் அரசு விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி களையும், புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.  திருச்சி அண்ணா விளை யாட்டரங்கில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, திருச்சி மாவட்ட மக்களுக்கு ரூ.1,042 கோடி மதிப்பிலான திட்டங்களையும், ரூ.656 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட 5,639 புதிய திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.308 கோடி மதிப் பீட்டிலான 5,951 புதிய திட்டப்பணி களுக்கு அடிக்கல் நாட்டினார். இதனை  தொடர்ந்து ரூ.79 கோடி மதிப்பீட்டிலான 22,716 பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை யும், மகளிர் சுயஉதவிக்குழுக் களுக்கு வங்கி கடன்கள் வழங்கி, மணிமேகலை விருது மற்றும்  மாநில அளவிலான வங்கியாளர் களுக்கு விருதுகளை வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:  உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வழங்கக்கூடிய வகையில் தமிழ்நாட்டில் 4 ஒலிப்பிக் அகாடமி கள் அமைக்கப்பட உள்ளன. திருச்சியில் அனைத்து வசதிகளு டன் கூடிய ஒலிம்பிக் அகாடமி  சர்வதேச தரத்தில் அமைக்கப் படும். ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டி களுக்கு இளைஞர்கள் தயா ராகவே ஒலிம்பிக் அகாடமி உரு வாக்கப்படுகிறது. இதன் வாயிலாக விளையாட்டுத்துறை யில் நமது மாணவர்கள் பல நாடு களுக்கு சென்று வெற்றிப்பெற வேண்டும்.

பெண்கள் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி உள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க முதல் முறையாக முனைப்பு காட்டியது திமுக அரசு தான். இந்தியாவில் முதல் முறையாக மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்தவர் கலைஞர். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் மணிமேகலை விருது, முடி வுற்ற பணிகளை தொடங்கி  வைத்தல், புதிய திட்டப்பணி களுக்கு அடிக்கல் நாட்டுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய விழா இது. மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரே ஆண்டில் ஒரு கோடி மக்கள் பயனடைந்து உள்ளனர். ஏழை, எளிய அடித் தட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தகூடிய திட்டங் கள் அனைத்தையும் நிறை வேற்றக் கூடிய ஆட்சியாக இந்த  அரசு செயல்பட்டு வருகிறது. இவ் வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டம் மணப்பாறை மொண்டி ப்பட்டியில் ரூ.1350 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காகித ஆலையின் 2ம் அலகையும் மற்றும் சிப்காட் தொழிற்பூங்காவையும் முதல மைச்சர் திறந்து வைத்தார்.  முன்னதாக தொழிற்சாலை யை பேட்டரி காரில் சுற்றி பார்வை யிட்டார். பின்னர் திருச்சியை அடுத்த மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சன்னாசிப்பட்டிக்கு சென்று, அங்கு மக்களை தேடி மருத்துவத்திட்டத்தின் கீழ் இயன்முறை சிகிச்சைபெற்று வரும் பயனாளிகளின் இல்லம் சென்று நலம் விசாரித்தார். பின்னர்  இத்திட்டத்தின் மகத்தான சாதனை நிகழ்வாக 1 கோடியே 1-ஆவது பய னாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார்.  விழாவில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு  தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்  மகேஸ் பொய்யாமொழி முன்னி லை வகித்தார். மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் வரவேற்றார். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டா லின், தங்கம் தென்னரசு, மா.சுப்பிர மணியன், பி.மூர்த்தி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.