திருப்பூர், பிப்.13- தொழில் நகரமான திருப்பூரில் ஏற்பட்டுள்ள தொழில் நெருக்கடி, வேலை யின்மையை அரசுக்கு சுட்டிக்காட்டும் வகையில், திருப்பூரில் பிப்ரவரி 14 (இன்று) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநாடு நடைபெறுகிறது. திருப்பூர் அரிசிக் கடை வீதியில் நடைபெறும் திருப்பூர் மாவட்ட தொழில் பாதுகாப்பு தொழிலாளர் வாழ்வுரிமை மாநாட்டிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் தலைமை ஏற்கிறார். மாநாட்டில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன் ஆகியோர் சிறப்புரையாற்று கின்றனர். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க பொதுச் செயலாளர் கீதாஞ்சலி எஸ்.கோவிந்தப்பன், பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் அகில் சு.ரத்தினசாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம், திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் பி.காந்திராஜன் ஆகியோர் பங்கேற்றுப் பேசுகின்றனர்.
ஒன்றிய, மாநில அரசுகள் அத்தியா வசியப் பொருட்கள் சட்டத்தில் மீண்டும் பருத்தியை இணைக்க வேண்டும், அனைத்துப் பகுதி உழைக்கும் மக்களுக் கும் கேரளாவை போல் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்திட வேண்டும், நூல் இறக்குமதிக்கான வரியை நீக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை மையப்படுத்தி இந்த மாநாடு நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்ட சிறு, குறு தொழில் களையும் தொழிலாளர்கள் வாழ்வுரிமை யையும் பாதுகாக்க நடைபெறும் இந்த மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்கும்படி கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.முத்து கண்ணன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.