சென்னை, பிப். 15 - ஆக்கிரமிப்புகள் வரன் முறைபடுத்துவதை அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரி வித்துள்ளது. ஈஞ்சம்பாக்கம், பெத்தேல்நகர் தொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் செவ்வாயன்று (பிப்.15) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், 2,839 ஆக்கிரமிப்பாளர்களின் விவரங் களை தொகுத்து தாக்கல் செய்துள்ளதாகவும், அடுத்தகட்ட மாக அரசுக்கு அனுப்பி, மாற்று இடம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்த சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2015ம் ஆண்டு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த போது 111 ஆக்கிர மிப்புகளே இருந்தன. தற்போது 30 ஆயிரம் பேர் வசிப்பதாக கூறுவது தவறு என்றார். பெத்தேல்நகர் பாது காப்பு பேரவை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிர சாத், 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 30 ஆயிரம் மக்களை ஒரே இரவில் அப்புறப்படுத்தக் கூடாது. புதிய இடத்துக்கு மாறுவ தில் சிக்கல்கள் உள்ளன என்றார்.
அரசு மாற்று இடத்தில் குடியமர்த்தும் நடவடிக்கையை ஏற்று, ஆக்கிரமிப்பை காலி செய்வ தாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி கள், இதுசம்பந்தமாக தனிப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களின் கருத்துக் களை பெற்று தெரிவிக்கும்படி அறிவுறுத்தினர். ஆக்கிரமிப்பு பகுதிகளை வரன்முறைப்படுத்த அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதி கள், அவ்வாறு செய்வது ஆக்கிர மிப்புகளை ஊக்குவிப்பதாக அமையும் என்றனர். ஆக்கிரமிப்பாளர்கள் அளித்த விவரங்களை ஆய்வு செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டனர். ஆக்கிரமிப்பாளர்கள் உத்தரவாதம் அளிக்கும் வகையில் வழக்கு விசார ணையை 10 நாட்களுக்கு ஒத்தி வைத்தனர். மேலும், வணிக நிறு வனங்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளனர்.