tamilnadu

ஜன. 16 பயணிக்க முன்பதிவு: முழு தொகை திரும்ப ஒப்படைப்பதாக அறிவிப்பு

சென்னை, ஜன.12- அரசு பேருந்தில் பயணம் செய்ய வருகிற 16 ஆம் தேதி முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு முழு தொகையும் கிடைக்க வழி வகை  செய்யப்பட்டுள்ளது என்று போக்கு வரத்து துறை அறிவித்து உள்ளது.  பொங்கலை முன்னிட்டு, போக்கு வரத்து துறையின் சார்பில் சிறப்பு  பேருந்துகள் இயக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு வருகிற 16  ஆம் தேதி அன்று முழு ஊரடங்கு அறிவித்துள்ளதால் பொங்கலுக்கு பின்பு வருகிற 16 ஆம் தேதியி லிருந்து 18 ஆதேதி வரை இயக்கு வதாக இருந்த சிறப்புப் பேருந்து கள் இயக்கம், ஜன 17ஆம் தேதியிலிருந்து  19 ஆம் தேதி வரை இயக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது. ஜன16 ஆம் தேதி அன்று முன்பதிவு செய்துள்ள பயணிக ளுக்கு முழு தொகையும் திருப்பி கிடைப்பதற்கு வழி வகை செய்யப் பட்டுள்ளது. எனவே, பயணிகள் வருகிற 16 ஆம்தேதி அன்று பயணம்  செய்வதை தவிர்த்து மற்ற நாட்களில் முன்பதிவு செய்து  பயணம் செய்யலாம் என்று  போக்குவரத்து துறை அரசு  முதன்மை செயலாளர் கே.கோபால்  அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கி றார்.