சென்னை, மார்ச் 10 - மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கக் கூடிய வகையில் யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் வியாழக் கிழமை (மார்ச் 10) நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர்கள், வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: “மாவட்ட ஆட்சித்தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் முதன் முறையாக மாவட்ட வன அதிகாரிகளையும் இணைத்து ஒருங்கிணைந்த மாநாடாக இந்த மாநாடு நடைபெறவிருக்கிறது. தமிழகத்தைப் பசுமை நிறைந்த மாநிலமாக மாற்றுவதற்கு மாநிலத்தில் இருக்கும் மொத்த பசுமைப் பரப்பினை குறைந்தபட்சம் 33 விழுக்காடாக 10 ஆண்டுக்குள் உயர்த்திட வேண்டும். இந்த இலக்கை அடைய ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஒரே திசையில் பயணிக்க வேண்டும்.
புதிய முதலீடுகள் வருவதற்கும் இளைஞர் களுக்கு வேலைவாய்ப்புக் கிடைப்பதற்கும், அதன் வழியாக நாம் விரும்பும் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் இலக்கினை அடைந்து மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதிசெய்யவும் சட்டம் ஒழுங்கு மிக மிக முக்கியமாகும். தமிழகத்தில் எப்போதும் சட்டம், ஒழுங்கு சீராக இருப்பதை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு விஷயத்திலே நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்களை இந்த அரசு ஒருபோதும் அனு மதிக்காது. மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளை விக்கக்கூடிய வகையில் யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமுதாய த்தில் அமைதி நிலவுவதை உறுதிசெய்திடக் கூடிய வகையில் சாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் மிகுந்த கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. நாசகர சக்தி கள் எந்த வடிவிலும் தலைதூக்க நாம் அனு மதித்துவிடக் கூடாது. எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் குலம் என்ற சமத்துவ சமூகமே, நமது அரசினுடைய குறிக்கோள். கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, மோசடி, நில அபகரிப்பு போன்ற பொது மக்களை பாதிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடு வோர் யாராக இருந்தாலும் அவர்களை ஒடுக்கு வதில் காவல்துறை எந்தவித பாரபட்சமும் காட்டக் கூடாது.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கிற்கும் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடிய சமூகவிரோத சக்திகளை கூலிப்படை களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண் டும். நீங்கள் உருவாக்கும் அமைதியில்தான் அனைத்தும் அடங்கி இருக்கிறது. சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருப்பது எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. அவற்றைக் குறைப்பதற்கு தேவையான நட வடிக்கைகளை நாம் எடுத்துக் கொண்டிருக் கிறோம். மாவட்ட அளவில் தீர்க்கப்பட வேண்டிய வட்ட அளவில் முடிக்கப்பட வேண் டிய வட்டார அளவில் களையப்பட வேண்டிய சிற்றூர் அளவில் செய்து முடிக்கப்பட வேண் டிய நடவடிக்கைகளை உரிய காலத்தில் செய்யாமல் இருப்பதன் காரணமாக, பெரும்பா லான மக்கள் கண்ணீரோடும், கவலைகள் நிறைந்த இதயத்தோடும் தீர்வினை எதிர்பா ர்த்து தலைமைச் செயலகத்திற்கு மனுக்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றைக் கருணையோடு பரிசீலனை செய்து விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நமது அரசின் திட்டங்களால் பயன்பெறும் பய னாளிகள் குறித்து துறைவாரியாகத் தொகுக்கப் பட வேண்டும். தமிழகம் ‘நம்பர்1’ என்ற நிலையை அடை யும். எனது கனவுத் திட்டத்தை உங்களை நம்பி நான் ஒப்படைக்கிறேன். நமது அரசின் சார்பில் தீட்டப்படக்கூடிய மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் வெற்றி என்பது உங்களைப் போன்ற மாவட்ட அளவில் உள்ள அதிகாரி களின் செயல்பாடுகளைப் பொறுத்தே அமை யும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமே யில்லை. எனவே, நீங்கள் அனைவரும் நேர்மை யாக, ஒளிவுமறைவற்ற, வெளிப்படைத் தன்மையோடு, முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும்.
அப்படி செயல்படும் உங்களுக்கு இந்த அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும். மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் நீங்கள் தயக்கமின்றி உங்களது கருத்துகளை எடுத்துச் சொல்லுங்கள். அவற்றை மேலும் சிறப்பாகச் செயல்படுத்துவதற்குத் தேவை யான ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். உங்கள் மனதில் தோன்றக்கூடிய புதிய எண்ணங் களை, திட்டங்களுக்கான ஆலோசனைகளை, மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய முன்னெடு ப்புகளை விளக்கமாக இங்கே தெரிவிக்க வேண்டும். புதிய முன்னெடுப்புகளுக்கு நமது அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும். இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் மாநில அமைச்சர்கள், தலைமை செயலர் வெ.இறையன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.