tamilnadu

img

‘பாசிச சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட்டு போராடுவோம்’

புதுதில்லி, அக். 19 - அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். இதற்கான தேர்தலில் 7 ஆயிரத்து 897 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார்.  இதன் மூலம், 22 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு  குடும்பத்தைச் சாராத ஒருவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு வந்துள்ளார். அவருக்கு காங்கிரசின் மூத்த தலை வர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டி யிட்டு, மொத்தம் பதிவான 9 ஆயிரத்து 500  வாக்குகளில் 1,072 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவிய சசிதரூரும், மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பது கவுரவம், பெரிய பொறுப்பு. அந்த பணியில் கார்கே வெற்றி பெற வாழ்த்து கிறேன். காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்ற தற்காக அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமையில் நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கட்சியை மேம்படுத்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “25 ஆண்டுகளாக கட்சியை வழி நடத்தி தற்போது காங்கிரஸ் தலைவர் பதவி யில் இருந்து விலகும் சோனியா காந்திக்கு நாங்கள் மிகப்பெரிய கடன்பட்டுள்ளோம். கடினமான காலங்களில் அவர் கட்சியை வழி நடத்தியமைக்கு அவருக்கு தலைவணங்கு கிறேன். அவர் தொடர்ந்து கட்சியை வழி நடத்த உதவ வேண்டும். புதிய தலைவர்  எதிர்கொள்ளும் சவால்களுக்கு உறுதுணை யாக இருக்க வேண்டும். சுதந்திரமான, நடு நிலையான காங்கிரஸ் தலைவர் தேர்தலை நடத்த தங்களால் இயன்ற உதவி செய்த ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் எனது நன்றிகள்” என்று சசிதரூர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் மற்றும் கட்சியின் மூத்தத்தலைவர் திக்விஜய் சிங் ஆகியோரும் மல்லி கார்ஜுன கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். “மல்லிகார்ஜூன கார்கேவின் பரந்த அனுபவம், காங்கிரஸ் அமைப்புக்கு மிகவும் பயன்அளிக்கும் என்றும்,  திறமையான தலைமையின் கீழ் கட்சி புதிய உயரங்களைஎட்டுவது மட்டுமல்லாமல், மேலும் வலுப் பெறும்” என்று அவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே, காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜூன கார்கே, செய்தியாளர்களுக்கு பேட்டி  ஒன்றை  அளித்துள்ளார். அதில், “ஜனநாயகத்திற்கு எதிரான, பாசிச மற்றும் வகுப்புவாத சக்தி களுக்கு எதிராக ஒன்றுபட்டு போராடுவோம்” காங்கிரஸ் கட்சியினருக்கு, காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். காங் கிரஸ் கட்சியில் பெரியவர், சிறியவர் என்ற  பாகுபாடு இல்லை. அனைவரும் தொண்டர் களாக இணைந்து கட்சிக்காக உழைக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக வாக்குகள் எண்ணப்பட்டு கார்கே முன்னிலையில் இருப்பதாக தகவல் கள் வெளியான நேரத்தில், ஆந்திரா மாநிலம் அடோனியில் ஒற்றுமை நடைபயணத்தில் இருந்த ராகுல் காந்தியிடம், “உங்களுக்கு காங்கிரசில் என்ன பதவி?” என்று  செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு, “கட்சியில் எனக்கு என்ன பதவி என்பதை கார்கே மற்றும் சோனியா காந்தி யிடம் கேளுங்கள்” என்று ராகுல் காந்தி பதி லளித்தார். மேலும், “என்னுடைய பணி என்ன என்பதை கட்சித் தலைவர்தான் முடிவு செய்வார்’’ என்றும் அவர் கூறியுள்ளார்.