tamilnadu

கூகுள் மெசேஜஸ் செயலியில் புதிய அம்சம் அறிமுகம்!

கூகுள் மெசேஜஸ் செயலியில் புதிய அம்சம் அறிமுகம்!

வாட்ஸ்அப்பில் இருப்பது போன்று, கூகுள் மெசேஜஸிலும், மெசேஜ்களை நீக்கும் ‘Delete for Everyone’ அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது குறித்து ஆண்ட்ராய்டு அத்தா ரிட்டி (Android Authority) வெளி யிட்டுள்ள ஒரு அறிக்கையில், கூகுள் மெசேஜஸ் உரையாடலில் ரிச் கம்யூனி கேஷன் சர்வீசஸ் (RCS) சாட்களை  நீக்கும் அம்சமான ‘Delete for  Everyone’ என்ற மிகவும் எதிர்பார்க்கப் பட்ட ஒரு அம்சத்தை சோதனை செய்து வருகிறதாக தெரிவித்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்கள் சொந்த சாதனங்களிலிருந்து மட்டுமல்லாமல், நம்முடன் சாட் செய்பவரின் சாதனங்களில் இருந்தும் மெசேஜ்களை நீக்க முடியும். நீக்கப் பட்ட செய்திகள் “செய்தி நீக்கப்பட்டது” என்று காணப்படும். நம்முடன் சாட் செய்பவரின் சாத னங்களில் மெசேஜ்களை நீக்கு வதற்கு 15 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. 15 நிமிடங்களுக்கு பிறகு, பயனர்கள் தங்கள் சொந்த சாத னங்களில் மட்டுமே மெசேஜ்களை நீக்க  முடியும். இந்த அம்சம் புதிய கூகுள் மெசேஜஸ் வெர்ஷனில் மட்டுமே வழங்கப்பட உள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.

கூகுள் பிளே ஸ்டோர்  331 செயலிகளை நீக்குகிறது!

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 331 தீங்கிழைக்கும் செயலிகளை நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து செயலிகளையும், பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சூழலில், சமீபத்தில் ஆண்ட்ராய்டு 13 இன் பாதுகாப்பு அம்சங்களைத் தவிர்த்து இயங்கும் சுமார் 331 தீங்கிழைக்கும் செயலிகளை பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான Bitdefender கண்டறிந்துள்ளது. இந்த செயலிகள் பயனர்களின் பாஸ்வேர்ட் மற்றும் கிரெடிட் கார்ட் விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை அணுகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தீங்கிழைக்கும் பட்டியலில், AquaTracker, ClickSave Downloader, Scan Hawk, Water Time Tracker and Be More மற்றும் TranslateScan உள்ளிட்ட செயலிகள் அடங்கும். இந்த செயலிகள் ஒவ்வொன்றும் 1 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விரைவில் கூகுள் அசிஸ்டெண்டை நீக்கம்! 

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருந்து கூகுள் அசிஸ்டெண்டை படிப்படியாக நீக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 2025-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், பெரும்பாலான மொபைல் சாதனங்களில் கூகுள் அசிஸ்டெண்ட் அம்சத்தை பயன்படுத்த முடியாது எனவும், ஆப் ஸ்டோர்களில் இருந்து பதிவிறக்கம் செய்யக் கிடைக்காது என்றும்  கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் அசிஸ்டெண்ட்டு க்கு பதிலாக கூகுளின் ஏஐ தொழில்நுட்பமான ஜெமினி யின் பயன்பாட்டை ஊக்குவிக்கவே இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது.  இருப்பினும், ஆண்ட்ராய்டு 10 அல்லது அதற்கு பிற்பாடு வந்த மொபைல் சாதனங்களில் மட்டுமே ஜெமினியை பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு 9 அல்லது அதற்கு முந்தைய பதிப்பில் இயங்கும் மொபைல் சாதனங்களில் கூகுள் அசிஸ்டெண்டையே தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.