சென்னை, ஜன.31- 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர் களுக்கு புதிய திருப்புதல் தேர்வு அட்ட வணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, 10ம் வகுப்பு மாணவர் களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 15 வரை நடைபெறும் எனவும், 2வது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 16-ம் தேதி வரையிலும், 2-வது திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது, செவ்வா யன்று (பிப்ரவரி 1) பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது.