tamilnadu

img

மதுரை அரசு மருத்துவமனை கோவிட் வார்டுக்கு புதிய டிஜிட்டல் மொபைல் எக்ஸ்ரே கருவி.... சு.வெங்கடேசன் எம்.பி., வழங்கினார்

மதுரை:
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கோவிட்-19 வார்டுக்கு புதியடிஜிட்டல் மொபைல் எக்ஸ்ரே கருவியைநாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கியுள்ளார்.

தற்பொழுது மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மதுரை அரசு இராஜாஜிமருத்துவமனை கோவிட்-19 வார்டுக்கு மதுரை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்சம்ரூபாய் மதிப்பில் கம்ப்யூட்டர் ரேடியோகிராபி கருவியுடன் மொபைல் எக்ஸ்ரேகருவிகளை மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.ரவீந்திரன் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சி.தர்மராஜ் ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர்  இரா.விஜயராஜன்,புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.நவீன தொழில்நுட்பக் கருவியான இந்த டிஜிட்டல் எக்ஸ்ரே, மொபைல் எக்ஸ்ரே கருவியில் எடுத்த எக்ஸ்ரே படங்களை டிஜிட்டல் எக்ஸ்ரே படமாகமாற்றக்கூடியது.இதன்மூலம் கொரோனா சிகிச்சை பிரிவு நோயாளிகள் அந்தந்த பிரிவுகளில் வைத்தே டிஜிட்டல் எக்ஸ்ரே படம் எடுக்க முடியும். இதன்மூலம் நோயாளிகள் சிரமமின்றி சிகிச்சைபெற பேருதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

;