சென்னை, ஜூலை 19 - ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங் கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு முன்ன தாக, சட்ட ஆணையத்தை ஆலோ சித்திருக்க வேண்டும் என்றும் கூறி யிருக்கும் நீதிபதிகள், இதுதொடர் பாக, நான்கு வாரங்களில் பதி லளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசானது, 1860-ஆம் ஆண்டின் இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் (IPC) பதிலாக, பாரதீய நியாய சன்ஹிதா (BNS), 1973-ஆம் ஆண்டின் குற்ற வியல் நடைமுறைச் சட்டத்திற்கு (CrPC) பதிலாக பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), 1872-ஆம் ஆண்டின் இந்திய சாட்சியச் சட்டத்திற்குப் (IE Act) பதிலாக பாரதீய சாக்ஷிய அதினியம் (BSA) ஆகிய புதிய சட்டங்களை கொண்டு வந்தது. ஒன்றிய அரசின் புதிய குற்ற வியல் சட்டங்கள், இந்திய அர சியலமைப்பின் ஒத்திசைவுப் பட்டியல்-3-இல் இடம்பெறுவதால், மாநில அரசுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டிருக்க வேண்டும்; ஆனால், மாநிலங்கள் தங்கள் கருத்துகளை தெரி விக்க வாய்ப்பு வழங்கப்படா மல் இச்சட்டங்கள் இயற்றப்பட்டி ருப்பதாக தெரிவித்த தமிழக அரசு, பிஎன்எஸ் மற்றும் பிஎன்எஸ்எஸ் -இன் பல பிரிவுகள் தெளிவற்றவை யாகவும் முரண்பாடுகளுடன் இருப்பதாகவும் குறித்து, இதுபற்றி ஆராய நீதிபதி சத்ய நாராயணன் தலைமையில் ஆணையம் ஒன்றையும் அமைத்தது. அத்துடன், புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மனுத் தாக்கல் செய்தார்
“நாடாளுமன்றத்துக்குள் கண்ணீர் புகை குண்டு வீசிய சம்பவத்தை கண்டித்ததால், இரு சபைகளில் இருந்தும் 150 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்ட நிலையில், எந்த விவாதமும் இல்லாமல் இந்த சட்டங்கள் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநில அரசுகளின் ஆலோசனை களைப் பெறாமல், சில பிரிவுகளை மாற்றம் செய்து, சட்டங்களை சமஸ்கிருதமயமாக்கி உள்ளனர். இது பல தரப்பினருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில், அரசு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதைக் கூட குற்றமாக்கியுள்ளனர். குற்றங் களுக்கு தண்டனைகளை அதிக ரித்துள்ளனர். ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் எனக் கூறியுள்ளதன் மூலம், தண்டனை குறைப்பு வழங்கும் குடியரசு தலைவர், ஆளுநரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தில், காவல் துறையினருக்கு அதிக அதி காரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கொலை, ஆசிட் வீச்சு வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களுக்கு கைவிலங்கு பூட்டுவதன் மூலம் தனிநபர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது” என்று மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் செந்தில்குமார் அமர்வில் வெள்ளியன்று விசார ணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ். பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “அரசியலமைப்பு சட்டப்படி ஆங்கிலத்தில் மட்டுமே சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், சமஸ்கிருதத்தில் சட்டங்களை நிறை வேற்றியது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது” என வாதிட்டார். ஒன்றிய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் ஆகி யோர், வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அப்போது, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், சிஆர்பிசி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த போதும் இதேபோல எதிர்ப்பு இருந்ததைச் சுட்டிக்காட்டினர். மேலும், புதிய சட்டங்களை கொண்டுவருவதற்கு முன்பு சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில், நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டனர்.