சென்னை, டிச.20- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி மூலம், செங்கல்பட்டில் 1 கோடியே 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்புக் கட்டடத்தை திறந்துவைத்தார். மதுரை மாவட்டம், கள்ளிக்குடியில் ரூ. 2 கோடியே 79 லட்சத்து 3 ஆயிரம், நாமக்கல் மாவட்டம், மோகனூரில் ரூ. 2 கோடியே 79 லட்சத்து 3 ஆயிரம், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூ ரில் ரூ.3 கோடியே 82 லட்சத்து 94 ஆயி ரம், சாத்தான்குளத்தில் ரூ.3 கோடியே 6 லட்சத்து 94 ஆயிரம். திருவாரூர் மாவட்டம், மன்னார் குடியில் ரூ.3 கோடியே 6 லட்சத்து 94 ஆயிரம் மற்றும் திருச்சியில் ரூ. 2 கோடியே 59 லட்சத்து 66 ஆயிரம், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் ரூ. 54 லட்சத்து 95 ஆயிரம் என மொத்தம் ரூ.19 கோடியே 84 லட்சத்து 99 ஆயி ரத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கட்டடங்களை யும் அவர் திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையத்தின் வாயிலாக துணை ஆட்சியர்களாக தேர்வு செய்யப்பட்ட 18 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.