மின்துறை அமைச்சரின் புதிய அறிவிப்புகள்
சென்னை, ஏப்.22 - சட்டப் பேரவையில், ஏப்.22 அன்று மின்சா ரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு: தமிழ்நாடு முழுவதும் மின் பகிர்மான கழகத் தால் இந்த ஆண்டில் 50 ஆயிரம் விவசாயி களுக்கு புதிதாக மின் இணைப்புகள் வழங்கப்ப டும். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் தேவைக்கேற்ப நிரப்ப நட வடிக்கை எடுக்கப்படும்.
ரூ.1,192 கோடியில் துணை மின் நிலையங்கள்
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரி யும் அனைத்து களப் பணியாளர்களுக்கும், பணியாளர்கள் பாதுகாப்பிற்காகவும் பயிற்சி மையங்கள் மூலம் பணியிடத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்பு பயிற்சிகள் வழங் கப்படும். தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழ கத்தில் ஒரு புதிய 400 கி.வோ. துணை மின் நிலையம் மற்றும் 11 புதிய 110 கி.வோ. துணை மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய அனல் மின் நிலையம்
தூத்துக்குடி அனல் மின் நிலையம், மேட்டூர் அனல் மின் நிலையம் 1 மற்றும் 2, வட சென்னை அனல் மின் நிலையம் 1 மற்றும் 2 ஆகிய மின் உற்பத்தி நிலையங்களில் ரூ.500 கோடியில் பல்வேறு உபகரணங்களும் மூலதன பணிகளும் மேற்கொள்ளப்படும். மின் தேவையை கருத்தில் கொண்டு, மேலும் மின் உற்பத்தியை அதிகரிக்க தூத்துக்குடி மாவட்டத் தில் புதிதாக 600 மெகா வாட் அனல் மின் நிலை யம் ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ.490 கோடியில் மின் பாதைகள்
மன்னார்குடி, மலைக்கோட்டை, சிதம்பரம், திருவிடந்தை, சமயபுரம், மேல்மலையனூர், திருவிடைமருதூர், காளையார்கோவில் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள தேரோடும் வீதிகள் மற்றும் திருவண்ணாமலை கிரிவலப் பாதை யில் செல்லும் மேல்நிலை மின் பாதைகள் புதை வடங்களாக மாற்றியமைக்கப்படும். மேலும், இயற்கை பேரிடர்களால் பெரிதும் பாதிக்கப் படும் கடலோர நகரங்களான கடலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் மேல்நிலை மின் பாதைகள் ரூ.490 கோடியில் புதைவடங்களாக மாற்றிய மைக்கப்படும்.