பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய ஆதார் சேவை மையம் துவக்கம்
நாமக்கல், ஜூன் 4- பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, பள்ளி பாளையம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் புதிய ஆதார் சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஆதார் சம்பந்தமான அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள ஏது வாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டாட்சி யர் அலுவலகம், அனைத்து நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகின்றன. பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மட்டுமே ஆதார் சேவை மையம் செயல்பட்டு வந்தது. இதன் காரணமாக ஒன் றியப் பகுதியிலுள்ள பொதுமக்கள் நீண்ட தூரம் பயணம் செய்து, நகராட்சி அலுவலகத்திற்கு வரவேண்டிய நிலை இருந்தது. மேலும், அதிகளவு பொதுமக்கள் வருகை தந் தால் ஆதார் சேவை பெறுவதிலும் காலதாமதம் ஏற்பட்டு வந் தது. இதனால் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் ஆதார் சேவை மையம் தொடங்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந் தனர். இதனையேற்று, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எல்காட் மூலம் புதிதாக ஆதார் சேவை மையம் புதனன்று தொடங்கப்பட்டுள்ளது. இம்மையமா னது காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணி வரை செயல் படும். இந்த மையத்தில் ஆதார் அட்டை முகவரி மாற்றம், பெயர் திருத்தம், பிறந்த தேதி மாற்றம், கை ரேகை புதிப் பித்தல் உள்ளிட்ட அனைத்து விதமான ஆதார் சம்பந்த மான அனைத்து சேவைகளை பெற இயலும், என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.