tamilnadu

நீட் தேர்வு: உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குக!

நீட் தேர்வு: உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குக!

சென்னை, மே 6 - நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி யின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு  வழங்க வேண்டுமென இந்திய மாண வர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் தெள. சம்சீர் அகமது மற்றும் மாநிலச் செயலாளர் கோ.  அரவிந்த சாமி ஆகியோர் விடுத்துள்ள  அறிக்கையில் தெரிவித்திருப்ப தாவது: நாடு முழுவதும் அரசு மற்றும் தனி யார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில  இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத்  தேர்வு (நீட்) ஞாயிறன்று நாடு முழு வதும் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பல்வேறு மையங்க ளில் தேர்வு நடைபெற்று வந்த நிலை யில் திருப்பூர், திருமுருகன்பூண்டி ஏவிபி கல்லூரியில் அமைந்திருந்த நீட் தேர்வு மையத்தில், மாணவி  ஒருவரின் உடையில் அதிக பட்டன்கள் இருந்ததால் அவர் தேர்வெழுத அனு மதி மறுக்கப்பட்டுள்ளது, அங்கிருந்த  பெண் காவலர் ஒருவர், மாற்று உடை  வாங்கி அவருக்கு கொடுத்த பின்னரே  அந்த மாணவி தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு மையங்களில் நடைபெறும் சோத னைகள் மனித உரிமைக்கு எதிரான தாக இருக்கிறது, அதன் தன்மை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, தேர்வு எழுத  வருபவர்களின் உடை மற்றும் அணி கலன்களில் ஏகப்பட்ட விதிமுறை களை வழங்கி இருக்கிறார்கள். இருந்தபோதும் தேர்வு எழுத வரக்கூடிய  மாணவ-மாணவிகளை சோதனை என்ற பெயரில் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். குறிப்பாக எல்லா விதமான மெட்டல் பொருட்களையும் அப்புறப் படுத்துவது, மாணவிகளின் தலை  முடியை முழுவதுமாக பரிசோதிக் கிறோம் என்ற பெயரில் அவர்களை தலைவிரிக் கோலமாக தேர்வு எழுதச்  செல்ல வைப்பது, காதுகளில் பரி சோதிப்பது என நம் கற்பனைக்கும் எட்டாத அளவில் மாணவர்களை ஒரு குற்றவாளிகளை போல் சோதனை செய்கிறார்கள்.  

ஊழலின் கூடாரம்

வட மாநிலங்களில் நடைபெறும் நீட் தேர்வு மையங்களில் இது போன்ற மனித உரிமை மீறல்கள் எது வும் நடைபெறுவதில்லை. மாறாக ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு,  பணம் பெற்றுக் கொண்டு தேர்வு மைய கண்காணிப்பாளரே மாண வர்களுக்கு விடையை சொல்லிக் கொடுப்பது என ஊழலின் கூடாரமாக திளைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அதன் நிலைமை தலைகீழாக இருக்கிறது. பரிசோதனை என்ற பெயரில், தேசிய  தேர்வு முகமை மாபெரும் வன் முறையை மாணவர்கள் மீது கட்ட விழ்த்து விட்டுள்ளது.  திருப்பூரில் மாணவிக்கு நடந்த  அநீதியை கண்டித்தும், தொடர்ச்சி யான தேசிய தேர்வு முகமையின் மனித உரிமை மீறலை கண்டித்தும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில்  மாநிலத் தலைவர் சம்சீர் அகமது  தலைமையில் போராட்டம் நடை பெற்றது. மாணவி கண்ணியமற்ற முறையில் நடத்தப்பட்டதை கண்டித்து  போராடிய இந்திய மாணவர் சங்க தோழர்களை தாக்கி, தரக்குறை வாக நடத்திய காவல்துறை துணை  ஆணையர் ராஜராஜன், ஆய்வாளர் இளங்கோ, புலனாய்வு பிரிவு அதி காரி ராமசாமி ஆகியோர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என இந்திய  மாணவர் சங்கத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

மனோரீதியான தாக்குதல்

இதனை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. வேறெந்த தேர்விற்கும் இல்லாத அளவிற்கு, ஏழை-எளிய மக்களின் மருத்துவ கனவை நசுக்கும் பேராயுத மாக நீட் தேர்வை மோடி அரசு பயன் படுத்திக் கொண்டிருக்கும் வேளை யில், அதையெல்லாம் தாண்டி தேர்வு  எழுத வருகின்றனர் மாணவர்கள். ஆனால், தேர்வு எழுதச் செல்வதற்கு முன்பு சோதனை என்ற பெயரில் மனோரீதியான தாக்குதலை இந்த அரசு நடத்துகிறது. எப்படியேனும் ஏழை-எளிய மக்களின் மருத்துவக் கனவை குழி தோண்டி புதைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு மோடி அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தொடரும் நீட் மரணங்கள்...

நீட் தேர்வு மரணங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கயல்விழி (17) என்ற மாணவி, நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து  கொண்டிருக்கிறார். நீட் தேர்வின் உயிர் பலிகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாக நீட் விலக்கு இருக் கிறது. தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கையை ஒன்றிய பாஜக  அரசு ஏற்க மறுப்பதன் விளை வாகவே இதுபோன்ற தற்கொலை கள் தொடர்கிறது.  எனவே, ஒன்றிய அரசு இனியும் தாமதிக்காமல் உடனடியாக விலக் களிக்க வேண்டுமெனவும், தற்கொலை  செய்து கொண்ட மாணவியின் குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருப்பதால் அக்குடும்பத்திற்கு தமிழ் நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர்கள் தெரி வித்துள்ளனர்.