tamilnadu

img

டீசலுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு பேருந்துகள்

சென்னை, ஜூன் 13- வரும் நாட்களில் அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு மாற்  றாக இயற்கை எரிவாயு பயன்படுத்  தப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகங்களில் உள்ள 20 ஆயி ரத்து 160 டீசல் பேருந்துகள் மூலம்,  தினசரி சுமார் 1 கோடியே 76 லட்சம்  பொது மக்கள் பயணம் மேற்கொள்  கின்றனர். மொத்த செலவில் சுமார்  27 விழுக்காடு டீசலுக்கு செலவிடப்  படுகிறது.  இந்நிலையில், சுற்றுச்சூழ லுக்கு உகந்த மாற்று எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்தல் என்ற நோக்கில், தமிழ்நாடு அரசின் நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023-ஐ பரிந்துரைத்துள்ளது.  அதன் அடிப்படையில், குறைந்த கார்பன் உமிழ்வு, அதி கப்படியான கிலோ மீட்டர், டீசலை  விட 7 விழுக்காடு முதல் 20 விழுக்  காடு வரை செலவு குறைந்த, சுற்றுச் சூழலுக்கு உகந்த, சுருக்கப்பட்ட  இயற்கை எரிவாயு மற்றும் திரவ  நிலை இயற்கை எரிவாயு பேருந்து களை, தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக் கழகங்களில் பரிட்சார்த்த அடிப்படையில் இயக்கிட, முத லமைச்சர் உத்தரவிட்டார்.  இதில், முதல் கட்டமாக மாநகர்  போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 4 திரவ நிலை இயற்கை எரிவாயு பேருந்துகள்  மற்றும் கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 2 சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு பேருந்துகள் என மொத்தமாக 6  பேருந்துகள் இயக்கத்தை பரிட் சார்த்த முறையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சென்னை பல்ல வன் இல்லத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர்  வியாழனன்று (ஜூன் 13) கொடிய சைத்து தொடங்கி வைத்தார். திரவ நிலை இயற்கை எரிவாயு  (எல்என்ஜி) பயன்பாட்டில் சென்னை மாநகரில் தடம் எண் 553 டபுள்யு என்கிற இரண்டு பேருந்துகள் மேற்கு சைதாப்பேட்டை முதல் திருப்பெரும்புதூர் வரைக்கும் இயக்கப்படுகிறது.  அதேபோல், விழுப்புரம் கழ கத்தில் தடம் எண் 76 சிபி பேருந்து  காஞ்சிபுரம்-பூந்தமல்லிக்கும்  மற்றொரு வழித்தடமான காஞ்சி புரம்-வடமங்கலம் வழித் தடத்தில் 76 விஏ பேருந்து இயக்கப்படுகிறது. கும்பகோணம் கழகத்தில் சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு  (சிஎன்ஜி) பேருந்து தடம் எண் 4 ஏ,  ராமநாதபுரம்-பெரியபட்டினத்திற் கும் தடம் எண் 228 ராமநாதபுரம்- சாயல்குடிக்கும் இயக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் போக்கு வரத்துத் துறை அரசு கூடுதல் தலை மைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாநிலங்களவை உறுப்பினர் மு. சண்முகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக  மேலாண் இயக்குநர் ஆர்.மோகன், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் எஸ்.எஸ். ராஜ்மோகன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாக  இயக்குநர் (தமிழ்நாடு மற்றும்  பாண்டிச்சேரி) எம். அண்ணா துரை, உயர் அலுவலர்கள், தொழிற்  சங்க நிர்வாகிகள் மற்றும் தொழி லாளர்கள் கலந்து கொண்டனர்.