tamilnadu

img

ஓய்வூதியர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு

சென்னை, டிச.8- அரசு நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களை பாது காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு  உண்டு என அகில இந்திய பி.எஸ்.என்.எல். டாட் ஓய்வூதியர் சங்க மாநா ட்டில் பேசிய நம்பூதிரி தெரிவித்தார். அகில இந்திய பி.எஸ்.என்.எல்.டாட் ஓய்வூதியர் சங்கத்தின் சென்னை மாநில 3ஆவது மாநாடு சென்னை வேப்பேரியில் தோழர் எஸ்.ஹேமா வதி நினைவரங்கில் புதனன்று (டிச. 7) நடைபெற்றது. வரவேற்புக்குழு செயல் தலைவர் கே.ஆறுமுகம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வி.குப்பன் வர வேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து சங்க த்தின் ஆலோசகர் வி.ஏ.என். நம்பூதிரி பேசுகையில், தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு 4 ஜி சேவையை அளிக்கும் ஒன்றிய தனது சொந்த நிறுவனத்திற்கு தரவில்லை. இதுபோன்ற ஒன்றிய அரசின் தவ றான கொள்கைகளே பி.எஸ்.என்.எல். நஷ்டத்திற்கு காரணம். இயற்கை பேரிடர் காலங்களில் எந்த தனியார் தொலை தொடர்புத் துறை நிறு வனங்களும் களத்தில் இல்லை. அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மட்டும் தான் களத்தில் நின்றது என்பதை சுட்டிக்  காட்டினார்.

பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டும் துறை அல்ல. அது பொதுமக்களுக்கான சேவைத் துறை. 40 ஆண்டுகள் இந்த நிறுவனத் திற்காக உழைத்து பணி ஓய்வு பெற்ற ஊழியர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. மேலும் அவர்கள் சமூகத்தில் கவுரவமாக வாழ்வதற்காக வழங்கப்படுவதுதான் ஓய்வூதியம். ஆனால் அதையும் பறிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. முதியோர்களுக்கான ரயில்வே கட்டண சலுகையையும் ஒன்றிய அரசு பறித்து விட்டது என்று குற்றம் சாட்டினார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் பல கோடியை தள்ளுபடி செய்யும் ஒன்றிய அரசு, கொரோனா தொற்றை காரணம் காட்டி பிடித்தம் செய்யப்பட்ட 9 மாத அகவிலைப்படியை வழங்க மறுக்கி றது. நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை கூட பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அமல்படுத்த மறுக்கிறது. எனவே சாதி மதம் கடந்து தொழி லாளர்கள், ஊழியர்கள் என்ற அடிப் படையில் அனைவரும் ஒன்று திரண்டு  போராட முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதில் அகில இந்திய உதவி  பொதுச்செயலாளர் ஆர்.முரளிதரன் நாயர், பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன் அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா, சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை, சென்னை தொலைபேசி சிஜிஎம் டி.பூங்கொடி, தமிழ்நாடு வட்டம் சித்தரஞ்சன் பிரதான் ஆகியோரும் பேசினர். சென்னை தொலைபேசி பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன் சர்க்கிள் செயலாளர் எம்.ஸ்ரீதர் சுப்பிரமணியன், ஓய்வூதியர் சங்கத்தின் சர்க்கிள் செயலாளர் ஆர்.ராஜசேகர், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் சர்க்கிள் செயலாளர் டி.காசி, பி.ராஜசுந்தரி (உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு) ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில உதவிச் செயலாளர் கே.கோவிந்த ராஜ் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

எம்.ஆர்.எஸ். மருத்துவ திட்டம் புனரமைக்கப்பட வேண்டும், கம்யூ டேஷன் காலம் 10 ஆண்டுகளாக மாற்ற ப்பட வேண்டும், சேவையில் உள்ள ஊழியர்களுக்கு இருப்பது போல் மருத்துவ காப்பீடு திட்டத்தை ஓய்வூ தியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும், பி.எஸ்.என்.எல். நிறுவ னத்திற்கு உடனே 5 ஜி சேவையை வழங்க வேண்டும், பி.எஸ்.என்.எல்., எல்ஐசி, ரயில்வே, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங் களை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டன.

புதிய நிர்வாகிகள்

மாநிலத் தலைவராக வி.குப்பன், செயலாளராக கே.கோவிந்தராஜ், பொருளாளராக என்.பஞ்சாட்சரம் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட் டனர்.