மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதிக்குழு சார்பில் திங்களன்று (ஜூன் 26) நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜியிடம் பகுதிக்குழு சார்பில் கட்சி நிதி வழங்கப்பட்டது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், எஸ்.குமார், பகுதிக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி எம்.சி., பகுதிக்குழு உறுப்பினர்கள் எஸ்.விஜயா, எஸ்.மகேஷ், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.