tamilnadu

img

கேரளாவின் எதிர்காலத்தை அறிவுச் சமூகம் தீர்மானிக்கும்

திருச்சூர், ஜுன் 27- கேரளாவின் எதிர்காலத்தை தீர்மா னிக்கும் முக்கிய விசயம் பணம் அல்ல, அறிவுச் சமூகம் என சிபிஎம் கேரள மாநி லச் செயலாளர் எம்.கோவிந்தன் கூறினார். தேசாபிமானி நடத்திய அட்சரமுற்றம் திறன் விழாவை செவ்வாயன்று (ஜுன் 27) துவக்கி வைத்து அவர் உரையாற்றினார். அப்போது அவர் மேலும் கூறுகையில், எந்த ஊடகத்திற்கும் மூலதன முதலீடு உண்டு. அந்த மூலதனத்தின் குறிக்கோள் லாபம். மாறாக, தேசாபிமானி என்பது மக்களிடம் இருந்து வசூல் செய்யப்படும் பணத்தில் செயல்படும் ஒரு பத்திரிகை. தேசாபிமானிக்கு முதலாளி இல்லை. தேசாபிமானி மட்டுமே மக்களின் நலன் களை நிலைநாட்டும் செய்தித்தாள். கேர ளாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் இணையற்ற பங்கு வகித்த மிக முக்கிய மான செய்தித்தாள் இது. வலதுசாரி கருத்துக்களை உருவாக்கி, கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன் னெடுத்துச் செல்லும் உலகின் மிகப் பெரிய ஊடக வலையமைப்பை கேரளா கொண்டுள்ளது. இங்கு, தேசாபிமானிக்கு நிறைய வேலைகள் உள்ளன.  பத்திரி கைச் சுதந்திரம் பற்றியும் தேசப்பற்றையும் இடதுசாரி இயக்கத்துக்கு யாரும் கற்பிக்க தேவையில்லை. ஏனென்றால் அவர்கள் சுயமாகக் கற்றுக் கொண்டவர்கள். அறிவு என்பது பொருந்தக்கூடிய தன்மை, சமூகத்தன்மை, வரலாற்றுத் தன்மை மற்றும் பரிமாற்றம் ஆகிய வற்றின் கலவையாகும். இவ்விழாவில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமின்றி, தோல்வியடைந்தவர்களும் கவுரவிக்கப் படுகிறார்கள். தோற்காமல் வெற்றி பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அறிவியல் ஆய்வுகள் இல்லாமல் ஞானத்தை அடைய முடி யாது என்றார் எம்.வி.கோவிந்தன்.