வடகாடு பட்டியலின மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
புதுக்கோட்டை, மே 6 - புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் உள்ள பட்டி யலின மக்கள் மீது கொலை வெறித் தாக்கு தல் நடத்திய சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வடகாடு கிராமத்தில் அடைக்கலங் காத்தார் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் ‘அண்ணா கைப்பந்துக் கழகம்’ என்ற பெயரில் விளையாட்டுத் திடல் அமைத்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி இளைஞர்கள் விளையாடி வருகின்றனர். இந்நிலையில், மேற்படி இடத்தில் தலித் மக்கள் பொங்கல் விழா நடத்துவதற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு முயற்சித்த போது, இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, மேற்படி இடம் பட்டியல் இன மக்களுக்குச் சொந்த மானது என்ற தீர்ப்பை பெற்றுள்ளனர். அண்ணா கைப்பந்து கழகத்தினர் மேல் முறையீடு செய்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட் களுக்கு முன்பாக மேற்படி அடைக்கலங் காத்தார் அய்ய னார் கோவிலில் பொங்கல் வைப் பதற்காக தலித் மக்கள் ஏற்பாடுகள் செய்தனர். அப்போது பிற சமூகத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். இதில், எந்தக் குற்றமும் செய்யாத பட்டிய லின மக்களை கைது செய்து காவல் துறையினர் அராஜகமாக நடந்து கொண்டுள்ளனர். இப்படியாக, வடகாடு பகுதியில் இரு தரப்பினரிடையே தொடர்ந்து பகைமைப் போக்கு இருந்து வந்துள்ளது. இதனை சமூகமான முறையில் தீர்த்து வைப்ப தற்கு மாவட்ட நிர்வாகமோ, காவல் துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில், வடகாட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த திங்கள்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் பட்டியலின மக்கள் குறிப்பிட்ட தூரம் வரை வெண்குடை ஏந்தி வருவது வழக்கமாக இருந்துள்ளது. திங்கள்கிழமை நடை பெற்ற தேர்த் திருவிழா வில் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி பட்டியலின மக்கள் வந்துவிட்டதாக சில சாதி வெறியர்கள் தக ராறு செய்துள்ளனர். இந்தத் தகராறு முற்றிய நிலையில், தலித் குடியிருப்பு களுக்குச் சென்று சாதிவெறியர்கள் வீட்டை கொளுத்தியும், அடித்து நொறுக்கியும் தலித் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரண்டு இருசக்கர வாகனம் எரிக்கப்பட்டுள்ளது. ஒரு இரு சக்கர வாகனம் அடித்து நொறுக் கப்பட்டுள்ளது. இரண்டு கார் சேதமாக்கப் பட்டுள்ளது. 7 வீடுகள் அடித்து நொறுக்கப் பட்டன. ஒரு வீடு எரித்து சாம்பலாக்கப் பட்டுள்ளது. இதில் படுகாயடைந்த 6 பெண்கள் உட்பட 20 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப் பட்ட மக்களை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஏ.ஸ்ரீதர், த.அன்பழகன், கி.ஜெய பாலன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் டி.சலோமி, செய லாளர் சி.ஜீவானந்தம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் எல்.வடிவேல், ஆ.குமார வேல் உள்ளிட்டோர் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். மேலும், மருத்துவமனையில் படுகாயடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.
காவல்துறைக்கு கண்டனம்
வடகாட்டில் பட்டியலின மக்கள் மீது தொடுக்கப்பட்ட கொலை வெறித் தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள் கிறது. தாக்குதல் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடுத் துள்ள அறிக்கை முற்றிலும் உண்மைக்குப் புறம்பாக உள்ளது. ஏதோ, பெட்ரோல் பங்கில் குடி போதையில் இரண்டு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு போல சித்தரித்துள்ளது. வழக்க மாக பல இடங்களில் பட்டியல் இன மக்க ளுக்கு எதிராக செயல்படும் போக்கையே காவல்துறையினர் இதிலும் காட்டு கின்றனர். எனவே, காவல்துறையினர் தனது போக்கை மாற்றிக்கொண்டு, தாக்குதல் தொடுத்த சாதி வெறியர்கள் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல்துறை உரிய பாது காப்பு வழங்குவதோடு, அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் வடகாடு பகுதியில் அமைதியும், இயல்பு நிலையும் திரும்புவதற்கு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.