tamilnadu

img

அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்

சென்னை, மார்ச் 1 – நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழி யர்களாக அறிவித்து, கருவூலம்  மூலமாக ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி செவ்வாயன்று (பிப்.28) நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. அரசாணை 152 மற்றும்  10 ஆகியவற்றை ரத்து செய்ய  வேண்டும். இந்த அரசாணை களில் விடுபட்ட பணியிடங்களை சேர்த்து புதிய அரசாணை வெளியிட வேண்டும், 1996 அக்டோபர் மாதத்திற்கு முன்பு  பணியில் சேர்ந்த தினக்கூலி பணியாளர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும். 2009 ஆம் ஆண்டிற்கு  பிறகு பணியில் சேர்ந்த ஓட்டு நர்களுக்கு தேர்வுநிலை, சிறப்பு நிலை ஊதியம் தர வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கமிட்ட னர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கா.முருகானந்தம் தலைமை தாங்கினார். தமிழ் நாடு தலைமை செயலக சங்க  செயலாளர் சு.அரிசங்கர் போராட்டத்தை தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலா ளர் மு.தாமோதரன், பொருளா ளர் இரா.சுவாமிநாதன் உள்ளிட்டோர் பேசினர். சென்னை மாநகராட்சி செங் கொடி சங்க பொதுச்செயலாளர் பி.சீனிவாசலு உள்ளிட்ட தோழமை சங்கங்களின் தலை வர்கள் உரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு நிறைவுரையாற்றினார்.