tamilnadu

img

‘தாயைப் போலவே தாய்மொழியும் சிறந்தது’ : காந்திகிராமப் பல்கலை. பதிவாளர் பேச்சு

சின்னாளப்பட்டி, பிப்.24- காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையின் சார்பில் உலகத் தாய்மொழி நாள் விழாக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்குக் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் வி.பி.ஆர்.சிவக்குமார் தலைமை வகித்தார். அவர் தமது உரையில், “தமிழைச் செம்மைப் படுத்துவதற்கும் மொழியை வளப்படுத்து வதற்குமான சிந்தனையைத் தூண்டும் நாள் தான் தாய்மொழி நாள். தமிழ்ச்சொற்கள் ஒவ்வொன்றும் இனிமையானவை. நம் உணர் வோடு கலந்தவை. தொடர்ந்து தமிழைப் பேசுவ தின் மூலம்தான் தமிழ்மொழியின் இனிமை யை உணர்ந்துகொள்ள முடியும். நம்மைப் பெற்றெடுத்து இந்தப் பூமியில் உலவ விட்ட  தாயை எவ்வாறு மதிக்கின்றோமோ அப்படித் தான் நம் தாய்மொழியையும் போற்ற வேண்டும்” என்றார்.  கோடைப் பண்பலை அகில இந்திய வானொலி நிலைய மேனாள் நிகழ்ச்சி இயக்குநர்  முனைவர் சுந்தர ஆவுடையப்பன் பேசுகை யில், “தமிழ் ஒரு பேரழகான மொழி. அதன் பிள்ளைகள் நாம் என்பதில் பெருமைகொள் வோம். தாய் மொழியில் பேசுவதும் எழுதுவதும் சிந்திப்பதும் நமக்குக் கிடைத்தவரம். ஒரு மொழி அழியாமல் பாதுகாப்பது அந்த இனத்தை அழிவிலிருந்து காப்பதற்குச் சமம்” என்றார். நிகழ்வில் தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற புலவர். துரை. தில்லான் கௌரவிக்கப்பட்டார். காந்திகிராம கிராமியத் தொழில்கள் மற்றும் மேலாண்மைத் துறைப் பேராசிரியர் முனைவர் எல்.இராதாகிருஷ்ணன், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சி.சிதம்பரம் வாழ்த்துரை வழங்கினர். திக்கெட்டும் தமிழ் பரவ … என்னும் தலைப்பில் முதுநிலை வேதியியல் துறை மாணவர் துளசிராமன் பேசினார். தமிழ்க்களம் அமைப்பின் செயலாளர் நா.சுகந்தி வரவேற்றார். உதவிச் செயலாளர் அரிமுருகன் நன்றி கூறினார்.