தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்து வெளியேறுபவர்கள் முறைப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து மூன்றாண்டுக்கு ஒருமுறை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 75.88 லட்சம் பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.