ஆண்டிப்பட்டி, மே 19-மோடி குகையிலேயே இருப்பதுதான் இனி நாட்டுமக்களுக்கு நல்லது என்றுஇளங்கோவன் கூறியுள்ளார். தேனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஞாயிறன்று ஆண்டிபட்டியில் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பலவித சர்ச்சைகளுக்கு பிறகு முடிவடைந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் 2 வாக்குச்சாவடி மையத்திற்கு மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதனை எந்த கட்சிகளும் விரும்பவில்லை. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாரணாசி சென்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார். தனது மகனை எப்படியாவது டெபாசிட் தொகையாவது வாங்கச் செய்ய வைக்க வேண்டும் என தெரிவித்துள் ளார். அவரது கோரிக்கை யை ஏற்றே தற்போது இங்குமறுதேர்தல் நடத்தப்படு கிறது.இறுதிகட்ட தேர்தல் நடந்து வரும் நிலையில் மோடி 20 மணி நேரத்துக்கு மேலாக குகையில் அமர்ந்து தியானம் செய்து வருகிறார். அவர் குகையிலேயே இருப்பதுதான் இனி நாட்டு மக்களுக்கு நல்லது.வருகிற 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நல்ல தீர்ப்பு கிடைக்கும். இந்தியாவில் ராகுல்காந்தி அடுத்த பிரதமராக பதவி ஏற்பார். தமி ழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார். இந்த மாற்றத்தை எதிர்பார்த்துதான் தமிழக த்திலும் இந்தியாவிலும் மக்கள் வாக்களித்து வரு கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.