tamilnadu

img

ஹிட்லர், முசோலினி செய்ததைத்தான் மோடி செய்கிறார்: கே.எஸ்.அழகிரி

சிதம்பரம், மார்ச் 26-  “தன்னைப் பார்த்து ராகுல்காந்தி கேள்வி கேட்டார் என்பதற்காக அவரை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விட மாட்டேன் என்று சொல்வது என்ன ஜனநாயகம்? ஹிட்லர், முசோலினி போன்றவர்கள் இதைத்தான் செய்தனர். இன்றைக்கு மோடியும் அதைத்தான் செய்கிறார்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலை வர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல்காந்தியை எம்.பி பதவி யிலிருந்து தகுதிநீக்கம் செய்த  ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சி யின் சார்பில், சத்தியாகிரக அறப் போராட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் போராட் டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதும் இது போன்ற பிரச்சினைகள் வந்தன. அப்போது மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தைச் சந்தித்தி ருக்கிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார். எந்த குற்றச்சாட் டையும் எதிர்கொண்டிருக்கிறார். பிரதமர் மோடியும் அதுபோல எதிர் கொள்ள வேண்டியதுதானே. தன்னைப் பார்த்து ராகுல்காந்தி கேள்வி கேட்டார் என்பதற்காக அவரை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விட மாட்டேன் என்று சொல்வது என்ன ஜன நாயகம்? ஹிட்லர், முசோலினி போன்ற வர்கள் இதைத்தான் செய்தனர். இன் றைக்கு மோடியும் அதைத்தான் செய்கிறார். எப்போதுமே சர்வாதிகாரிகள், தோல்வியடைய தோல்வியடைய வெறிகொண்டு எதை வேண்டு மானாலும் செய்வார்கள். அதைத் தான் பிரதமர் மோடியும் செய்து கொண்டிருக்கிறார். பிரதமரின் இந்த செயல்பாடுகளை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது” என்று அவர் கூறினார்.