tamilnadu

img

தமிழக மருத்துவ மாணவர்களை வஞ்சிக்கும் மோடி அரசு

சென்னை, அக்.13- அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 83 மருத்துவ படிப்பு இடங்களை திரும்ப வழங்கக் கோரி தேசிய மருத்துவ ஆணையத்துக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை  கடிதம் அனுப்பியுள்ளது.  அகில இந்திய ஒதுக்கீட்டில் மாநில  அரசு வழங்கிய மருத்துவப் படிப்பு இடங்களில் 83 எம்.பி.பி.எஸ். இடங்கள்  நிரப்பப்படாமல் உள்ளன. தேசிய மருத்துவ ஆணையம் நான்கு கட்ட மருத்துவப் படிப்புக் கலந் தாய்வை முடித்த நிலையில் 83 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பவில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 16, மதுரை  எய்ம்ஸில்  3 இடங்கள் உட்பட மொத்தம் 83 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படா மல் உள்ளன. மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு செப்.30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் 83 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்நிலையில் 83 மருத்துவப் படிப்பு இடங்களை திரும்ப வழங்கக் கோரி தேசிய மருத்துவ ஆணையத்துக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் காலி யாக உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை திரும்ப வழங்க வலி யுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ இடங்கள் வீணாவதை தடுக்க வும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு ஆறு எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் வீணான நிலையில் இவ்வாண்டு 83 இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு  மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் சேரு வதற்கு தமிழக மாணவர்கள் தயாராக உள்ளனர். ஆனால், கடைசி கட்ட கலந்தாய்வு முடிந்தபின்பும் காலியாக உள்ள இடங்களை சம்மந்தப்பட்ட மாநில அரசுகளிடம் ஒப்படைக்க மாட்டோம் எனக் கூறுவது தவறானது என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால் இப்பிரச்சனை குறித்துப் பேசிய, தேசிய மருத்துவ ஆணை யத்தின் அதிகாரியொருவர், “உச்சநீதி மன்ற உத்தரவின்படி நாங்கள் மாநில அரசுக்கோ அல்லது நிகர்நிலைப் பல் கலைக்கழகங்களுக்கோ இடங்களைத் திருப்பித் தருவதில்லை” என்று கூறி யுள்ளார்.  மேலும் ஒதுக்கப்பட்ட இடங் களில் சேராத மாணவர்களை தகுதி நீக்கம் செய்வோம் என நாங்கள் எச்ச ரித்தோம். இது காலியிடங்களை நிரப்ப உதவியது. ஆனால், எங்களால் அதை முழுமையாக அமல்படுத்தமுடிய வில்லை” என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். தமிழக அரசு அனைத்திந்திய ஒதுக்கீட்டின் கீழ் 800 மாணவர் சேர்க்கை இடங்களை அளிக்கிறது. இதில் 15 சதவீதம் அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள்.