கீழடி அகழாய்வு அறிக்கையை மாற்றி எழுதச் சொல்லும் மோடி அரசு!
தமிழர்களின் தொன்மை வரலாற்றை இருட்டடிப்பு செய்ய முயற்சி
சென்னை, மே 23 - தமிழர்களின் பண்டைய நாகரி கத்தைப் பற்றிய முக்கியமான தகவல் களைக் கொண்ட கீழடி அகழ்வா ராய்ச்சி அறிக்கையை, ஒன்றிய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை (ASI) திருப்பி அனுப்பியுள்ளது. அத்துடன், அந்த அறிக்கையை தாங்கள் கூறுவது போல திருத்தி எழுதுமாறும், உத்தரவிட்டுள்ளது. இது தமிழ் வரலாற்று ஆய்வா ளர்கள் மற்றும் அறிஞர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கீழடி அகழாய்வு ஏன் முக்கியம்? மதுரை அருகே கீழடி கிரா மத்தில் நடத்தப்பட்ட அகழ்வா ராய்ச்சி தமிழர்களின் பழமையான நாகரிகத்தைப் பற்றிய புதிய உண் மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. இந்த ஆய்வின் மூலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டி லேயே தமிழகத்தில் நகர்ப்புற நாக ரிகம் இருந்தது என்ற உண்மை நிரூபணமானது. இது தமிழர்களின் வரலாற்றை இன்னும் பழமையான தாக நிறுவியது. என்ன நடந்தது? தொல்லியல் ஆய்வாளர் அமர் நாத் ராமகிருஷ்ணன் கீழடி அகழ் வாராய்ச்சியின் பொறுப்பாளராக இருந்தார். அவர் மூன்று ஆண்டு களாக கடுமையாக உழைத்து, 982 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக் கையைத் தயாரித்தார். இந்த அறிக் கையில் கீழடியில் கண்டுபிடிக்கப் பட்ட பல்வேறு பொருட்களின் காலம்,அவற்றின் முக்கியத்துவம், தமிழர்களின் பண்டைய வாழ்க்கை முறை போன்ற முக்கிய தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
அறிவியல் முறையில் நிரூபணம்
அமர்நாத் ராமகிருஷ்ணன் நவீன அறி வியல் முறையான ‘கார்பன் டேட்டிங்’ (Carbon Dating) மற்றும் ‘துரித நிறை நிற மாலை’ (AMS - Accelerator Mass Spectro metry) ஆகிய முறைகளைப் பயன்படுத்தி ஆய்வு செய்தார். 2017 பிப்ரவரியில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட கரியின் மூலம் இந்த இடம் கி.மு. 200-க்கு முற்பட்டது என்பது நிரூப ணமானது.
கண்டெடுக்கப்பட்ட முக்கிய பொருட்கள்:
மணிகள், செப்புப் பொருட்கள் மட்பாண்டங்கள் இரும்பு ஆயுதங்கள் தங்க ஆபரணங்கள் எழுத்துக் குறியீடுகள் பொறிக்கப்பட்ட ஓடுகள் வர்த்தகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட எடை கற்கள் இவை அனைத்தும் சங்க காலத்தி லேயே தமிழகத்தில் உயர்ந்த நாகரிகம் இருந்ததை நிரூபிக்கின்றன. அப்படியிருந்தும், கீழடி அகழாய்வு அறிக்கையை மாற்றி எழுத வேண்டும் என்று தொல்லியல் துறை ஏன் வலியுறுத்த வேண்டும்.
பொருத்தமற்ற காரணங்கள்:
1. “அறிக்கையை மேலும் உண்மை யானதாக மாற்ற வேண்டும், 2. மூன்று வெவ்வேறு காலகட்டங்க ளுக்கு சரியான பெயரீடு தேவை, 3. வரைபடங்களில் தெளிவு இல்லை, 4. சில முக்கிய ஆவணங்கள் விடு பட்டுள்ளன”; - என்று பொருத்தமற்ற காரணங்களைத் தான் தொல்லியல் துறை கூறுகிறது.
நிபுணர்களின் கடும் எதிர்ப்பு
இதற்குத் தான் தற்போது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் “Journey of a Civilisation: Indus to Vaigai” (ஒரு நாகரிகத்தின் பயணம் : சிந்து முதல் வைகை வரை”) என்ற நூலின் ஆசிரியரு மான ஆர். பாலகிருஷ்ணன் இந்த நடவடிக் கையை கடுமையாக விமர்சித்துள்ளார். “போதுமான அளவில் அகழ்வாராய்ச்சி செய்யாதது ஒரு சோகம். ஆனால் அறிக்கை களை வெளிவர விடாதது, இன்னும் பெரிய சோகம். இது பரிதாபகரமானது” என அவர் கூறுகிறார். “இந்தியா போன்ற பல்கலாச்சார நாட்டில், வரலாறு மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் கையாளப்பட வேண்டும். ஆனால், இங்கே அப்பட்டமான சார்பு தெரி கிறது.” என்று சாடுகிறார்.
முன்னுதாரணங்கள்
இதற்கு ஆர். பாலகிருஷ்ணன் குறிப்பிட்ட சில முக்கியமான எடுத்துக்காட்டுக்களையும் முன்வைக்கிறார். 1. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி : ஆங்கிலேய தொல்லியல் ஆய்வாளர் அலெக்சாண்டர் ரியாவுக்குப் பிறகு, 100 ஆண்டுகளுக்கு யாரும் இந்த இடத்தைத் தொடவில்லை. 2. டி. சத்தியமூர்த்தியின் அறிக்கை: ஆதிச்சநல்லூர் குறித்த டி. சத்திய மூர்த்தியின் அறிக்கை நீதிமன்றத்தின் தலையீடுகளால் 15 ஆண்டுகளாக வெளி யிடப்படவில்லை. 3. கீழடி: இப்போது அதே பிரச்சனை மீண்டும் கீழடி யில் நடக்கிறது.
ராமகிருஷ்ணாவின் பணி மாற்றம்
அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது அறிக் கையை 2023 ஜனவரி 30-ல் இந்திய தொல்லி யல் துறை (ASI)யின் இயக்குநர் ஜெனரலுக்கு அனுப்பினார். ஆனால் அதற்கு முன்னர் 2017-லேயே அவர் அசாம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் பழங்காலப் பொருட்கள் துறையின் இயக்குநராக பணி யாற்றுகிறார். அதாவது, அறிக்கை சமர்பிக் கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து திடீ ரென ஏஎஸ்ஐ (ASI) திருத்தம் கேட்கிறது.
ஏஎஸ்ஐ வலியுறுத்துவது என்ன?
“1. காலக்கணக்கு மாற்றம்: மூன்று வெவ்வேறு காலகட்டங்களுக்கு புதிய பெயர் கள் வேண்டும். முதல் காலகட்டத்தை கி.மு. 8 - 5 ஆம் நூற்றாண்டு என்பதை கி.மு. காலம் என்று மாற்ற வேண்டும். 2. ஆரம்பகாலம்: ஆரம்ப காலகட்டம் கி.மு. 300-க்கு முற்பட்டது என்று குறிப்பிட வேண்டும். 3. வரைபடங்கள்: தற்போதுள்ள வரை படங்களை சிறந்த வரைபடங்களால் மாற்ற வேண்டும். கிராம வரைபடத்தில் தெளிவு இல்லை. 4. விடுபட்ட ஆவணங்கள்: திட்ட வரை படம், விளிம்பு வரைபடம், அடுக்கு வரைபடம் போன்றவை விடுபட்டுள்ளன” என்று ஏஎஸ்ஐ கூறுகிறது.
தமிழக வரலாற்றுக்கு ஏற்படும் பாதிப்பு
இந்திய தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கை தமிழகத்தின் பண்டைய வரலாற்றை நிறுவுவதில் பெரும் பின்ன டைவை ஏற்படுத்தக்கூடும். கீழடி அகழ்வா ராய்ச்சி மூலம் கிடைத்த ஆதாரங்கள், தமிழர்களின் நாகரிகம் கி.மு. 3-ஆம் நூற்றாண் டிலேயே மிக உயர்ந்த நிலையில் இருந் ததை நிரூபிக்கின்றன. இந்த அறிக்கையில் தாமதம் ஏற்பட்டால், தமிழர்களின் பண்டைய வரலாற்றை உலகுக்கு நிறுவுவதில் பிரச்சனை ஏற்படலாம். கீழடி அகழ்வாராய்ச்சி தமிழர்களின் பெரு மைக்குரிய வரலாற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. அவ்வாறிருக்க, இந்த அறிக்கையை மாற்றி எழுதும்படி கேட்கும் இந்திய தொல்லியல் துறை (ASI)-யின் நட வடிக்கை வரலாற்று ஆய்வாளர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழர்களின் பண்டைய நாகரிகம் குறித்த உண்மைகள் உரிய நேரத்தில் வெளியாக வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக! - சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
கீழடி அகழாய்வு உண்மைகளை இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கீழடி எனும் வரலாற்றுத் தொல் நகரம் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் ஒன்றிய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார். ஆனால் ஒன்றிய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை வெளியிடவில்லை. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது “விரைவில் வெளியிடப்படும்” என்று தொல்லியல் துறையால் உறுதி மொழி அளிக்கப்பட்டது. ஆனாலும் இப்பொழுது வரை அறிக்கை வெளியிடப்படவில்லை. இந்நிலையில், மே 27 அன்று நாடாளுமன்ற உறுதிமொழிக் குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என ஒன்றிய தொல்லியல் துறை அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது. கீழடியின் உண்மைகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ஒன்றிய தொல்லியல் துறை எளிதில் முன்வராது. “தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும்” என்றென்றும் எதிரிகள் யார் என்பதை ஒன்றிய தொல்லியல் துறையின் ஒவ்வொரு செயலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. புராணங்களை வரலாறாக மாற்ற நாள்தோறும் பணியாற்றி வரும் பாஜக அரசு அதே வேகத்தோடு நமது வரலாற்றை மறைக்கவும் பணியாற்றி வருகிறது. தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை என்பது பாஜக அரசின் அரசாணையோடு சம்பந்தப்பட்டதல்ல.. நிரூபிக்கப்பட்ட அறிவியலோடு சம்பந்தப்பட்டது! அதனை மறைக்க அவர்களால் ஒரு போதும் முடியாது. “கீழடி தமிழர்களின் தாய்மடி” என்ற உண்மையை உரக்கச்சொல்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நிதியை நிறுத்தியதும் ஒன்றிய பாஜக அரசு தான்! தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு பதிலடி
“கீழடி ஆய்வுக்கு நிதி ஒதுக்கியதே ஒன்றிய அரசு தான்” - என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியிருக்கும் நிலையில், அதுபற்றியும் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். ‘கீழடி ஆய்வுக்கு நிதி ஒதுக்கியதே ஒன்றிய அரசு தான்’ - என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை கூறுகிறார். அதனால் தான் கேட்கிறோம். முதல் ஆண்டு நிதி ஒதுக்கிவிட்டு அடுத்த ஆண்டு ஏன் நிறுத்தினீர்கள்? ஆய்வில் எதுவும் கிடைக்கவில்லை என்றால் நிதியை நிறுத்துவார்கள். எல்லாம் கிடைத்த போது ஏன் நிறுத்தினீர்கள்? நீங்கள் ஒதுக்கிய நிதி, நீங்கள் சொல்லிவரும் வரலாற்றுக்கு எதிரான உண்மையை கண்டறிந்ததால் பதற்றமடைந்து நிதியை நிறுத்தினீர்கள். வேதநாகரிகத்துக்கு முந்தையது தமிழர் நாகரிகம் என்ற உண்மையை உங்களால் ஏற்க முடியவில்லை. எனவே நிதியை நிறுத்தினீர்கள். ஆய்வை நிறுத்தினீர்கள். ஆய்வறிக்கையை எழுதவிடாமல் இடையூறு செய்தீர்கள். அதையும் மீறி ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்ட பின்னும் வெளியிடாமல் முடக்க நினைத்தீர்கள். நாடாளுமன்றத்தின் தலையீடு மூலம் வெளியிட முயற்சித்தால் இப்பொழுது “போதிய நம்பகத்தன்மை இல்லை” என்று சொல்லி நிறுத்துகிறீர்கள். இது மட்டுமல்ல, இன்னும் எவ்வளவு இடையூறுகள் செய்தாலும் அனைத்தையும் கடந்து தன் வரலாற்றை மெய்பிக்கும் ஆற்றல் கீழடிக்கு உண்டு. ஏனென்றால் அது புராணங்களில் எழுதப்பட்ட கற்பனை நகரமல்ல. இம்மண்ணில் கட்டி எழுப்பப்பட்ட தமிழர்களின் தொல்நகரம். மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தொல் தடங்கள் நீங்கள் நிதியை மறுப்பதன் மூலமோ, ஆய்வை நிறுத்துவதன் மூலமோ மறைந்து விடாது. வெளிப்பட்டுவிட்ட வரலாற்று உண்மைகளுக்கு வெளிச்சம் கூடத்தான் செய்யும். அது தான் அறிவியல்” என்றும் சு. வெங்கடேசன் எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.