சென்னை, ஜன.29- சென்னை ராஜா அண்ணாமலை புரம், அன்னை சத்யா நகர், துர்காபாய் தேஷ்முக் சாலையில் உள்ள முத்தமிழ்ப் பேரவையில் ஞாயிறன்று (ஜன.29) மருத்துவ அறிவியல் மாநாடு நடைபெற்றது. காது, மூக்கு, தொண்டை மருத்துவ கூட்டமைப்பின் சார்பில் தமிழில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த மாநாட்டை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: துபாயில் நடை பெற்ற உலக காது, மூக்கு, தொண்டை பேரவை கூட்டத்தில் உலகெங்கிலும் இருந்து 10 தலை சிறந்த மருத்துவர்களுக்கு உயரிய தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டிருக்கிறது. அதில் ஆசிய கண்டத்தில் இருந்து பன்னாட்டு விருதுக்கு தேர்வான ஒரே மருத்துவர் மோகன் காமேஸ்வரன் தான். அவருக்கு எனது வாழ்த்துக்கள். இந்த மாநாடு முழுக்க முழுக்க தமிழில் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியா கும். நிர்வாகத்தில் தமிழ், ஆட்சியில் தமிழ், பள்ளி, கல்லூரிகளில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ், கோவில்களில் தமிழ், இசையில் தமிழ் என எங்கும் தமிழ் எதிலும் தமிழ். அண்ணா, கலைஞர் வழியில், தமிழுக்கு முக்கியத்துவம் தரும் அரசாக, முக்கியத்துவம் அளிக்கும் அரசாக நமது அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்மையில் கூட மருத்துவ நூல்களை தமிழில் மொழி பெயர்த்து அரசின் சார்பில் வெளியிட்டிருக்கிறோம்.
தொழில் படிப்புகள் அனைத்தையும் தாய் மொழியில் படிக்க வசதியாக அனைத்து நூலையும் மொழி பெயர்த்து வெளியிடும் பணியை தொடங்கி இருக்கிறோம். மருத்துவம் என்பது எளிமையானதாக, புதுமை யானதாக அதே நேரத்தில் செலவு இல்லாததாக அமைய வேண்டும். மருத்துவம் நவீனமாகி வருகிறது. ஆனால் அதிக தொகை செலவழிக்க வேண்டியதாகவும் இருக்கிறது. நவீன மருத்துவ வசதிகள் எல்லா ருக்கும் கிடைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் வழங்குகிறோம். மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் வழங்கு கிறோம். மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 திட்டங்கள் மூல மாக தருகிறோம் என்றாலும் அதிக படியான மக்கள்தொகை கொண்ட இந்த நாட்டில் அனைத்து தேவை களையும், சேவைகளையும், அரசு மருத்துவமனை மட்டும் வழங்கினால் அது போதாது. இதில் தனியார் பங்க ளிப்பும் மிக மிக முக்கியமாக இருக்கி றது. அப்படி தனியார் மருத்துவமனை களை பங்களிக்க செய்யும்போது அதன் கட்டணம் ஏழைகளுக்கு உதவுவ தாக அமைய வேண்டும். கல்வியும், மருத்துவமும் சேவை துறைகள். சேவை துறையாகவே செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.