tamilnadu

img

1897 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

1897 பயனாளிகளுக்கு நலத்திட்ட  உதவிகள் வழங்கிய அமைச்சர்

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எளம்பலூர், செஞ்சேரி, எசனை, லாடபுரம் மற்றும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட டி.களத்தூர் ஆகிய கிராமங்களில் ஊரகப் பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் புதன்கிழமை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, 1,897 பயனாளிகளுக்கு ரூ.16.41 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  இந்நிகழ்வுகளில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, திட்ட இயக்குநர்கள் சு.தேவநாதன் (ஊரக வளர்ச்சி முகமை) செந்தில் குமரன் (மகளிர் திட்டம்), திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி, சார் ஆட்சியர் சு.கோகுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.