நாகை மாலிக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில்
சென்னை, ஏப்.17- கோயில் நிலங்களில் குடியிருப் போருக்கான வாடகை வசூலிக்கும் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்களன்று (ஏப்.17) கேள்வி நேரத்திற்கு பிறகு, “கோயில் நிலங்களில் பல தலைமுறைகளாக வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்குதல், கொரோனா காலத்தில் வாடகை, வணிக வாடகை, குத்தகை விவசாயிகளின் குத்தகை தொகை ஆகியவற்றை ரத்து செய்தல் மற்றும் அரசாணை எண் 318 ஐ அமல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகைமாலி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியது வருமாறு:- கோடிக்கணக்கான மதிப்புள்ள கோயில் சொத்துக்களை வைத்திருப் போரிடமிருந்து, அந்த சொத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை கையிலெடுக்க வேண்டுமென்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், பல தலைமுறைகளாக 400 சதுர அடி, 600 சதுர அடி, 1000 சதுர அடிமனையில் குடியிருப்போர் களையும் அந்த மனையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று சொல்வது சரியல்ல. ஆகவே, இப்படி குடியிருக்கக் கூடிய ஏழை, எளிய மக்களுக்கு அவர்கள் குடியிருக்கும் மனைக்குப் பட்டா வழங்க வேண்டு மென கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆட்சி இதை செய்யும் என்று மக்கள் நம்பிக்கொண்டும், எதிர்பார்த்தும் கொண்டுமிருக்கிறார்கள். ஆகவே, இவர்களின் நம்பிக்கையை முதல் வரும் அமைச்சரும் நிறைவேற்றித் தர வேண்டுகிறேன். காலங்காலமாக ஐந்து, ஆறு தலை முறைகளாக கோயில் நிலங்களில் குடியிருந்து வரக்கூடியவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று அரசு அழைப்பது சரியல்ல. அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். குடி யிருப்பை உறுதி செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் மக்கள் துன்ப, துயரங்களை சந்தித்து பெரும் அவ திப்பட்டனர். எனவே, கொரோனா காலத்திற்கான வாடகையை செலுத்த வேண்டுமென்று நிர்ப்பந்திப்பதை அரசு கைவிட வேண்டும்.
வடசென்னையின் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ. 1000 கோடி ஒதுக்கி, எந்த அரசும் செய்யாததை இந்த அரசு செய்துள்ளது. இது சென்னை மக்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டை யும் பெற்றுள்ளது. அதேபோல், கோயில் மனைகளில் சென்னை உள்ளிட்டு தமிழ்நாடு முழு வதும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பட்டா வழங்கி ஏழை, எளிய மக்களின் நலன்களை பாது காக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதிலளித்து பேசிய இந்துசமய அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு,“இனா மாக அளிக்கப்பட்ட நிலங்களை எந்த நோக்கத்திற்காக வழங்கப்பட்டதோ, அதனை நிறைவேற்றம் செய்யும் நோக்கத்தோடு செயல்படுவதை தவிர பிற வகையில் இலவசமாக வழங்க இயலாது”என்றார். தற்போது, தனிப்பட்டவர்க ளுக்கோ தனிப்பட்ட நிறுவனங்க ளுக்கோ கோயில்கள் மற்றும் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலங்கள் விற்பனை செய்யப்படு வதில்லை. மேலும், பொது நலன் கருதி அரசு மற்றும் அரசுசார் நிறுவனங்க ளுக்கு மட்டுமே கோயில்கள் மற்றும் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன என்றும் அவர் கூறினார்.
நீதிமன்றம் தடை!
கோயில் நிலங்களிலுள்ள குடியிருப்பு ஆக்கிரமணங்கள், அதில் குடியிருக்கும் ஏழை குடும்பங்களின் நலன்கருதி விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியான நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி வரன் முறைப்படுத்த அந்த நிலங்களை உரிய வகையில் கையகப்படுத்தி வழங்க, அரசாணை (நிலை) எண் 318 30.8.2019 அன்று வெளியிடப்பட்டது. ஒருவரையும் வெளியேற்ற வில்லை ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும்போது வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் மக்களுக்கு மாற்று ஏற்பாடு இல்லாமல் அகற்றக்கூடாது என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள் ளார். அதன்படிதான் துறை அதிகாரி கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கூட்டாகவோ, குழுவாகவோ ஆக்கிர மித்திருக்கும் ஏழை-எளிய மக்களில் ஒருவர்கூட வெளியேற்றப்பட வில்லை. உள்வாடகை தாரர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார். அரசாணை எண் 319 என்பது கடந்த கால அதிமுக ஆட்சியில் போடப்பட்டது. அதன்படி, வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொண்டபோது சிலர் நீதி மன்றத்திற்கு சென்றனர். நீதிமன்றம் தடையாணை கொடுத்துள்ளது. அந்த வழக்குகள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இறுதி தீர்ப்பு வந்த தும் முறைப்படி நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் அமைச்சர் தெரிவித் தார்.
10 மடங்கு வாடகை உயர்வு
அதைத் தொடர்ந்து பேசிய நாகைமாலி,“தமிழ்நாடு முழுவதும் கோவில் இடங்களில் பல தலைமுறை களாக நீண்ட காலமாக குடியிருப்ப வர்கள் மற்றும் விவசாய நிலங்க ளில் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகள், சிறு கடை வைத்திருப் போருக்கு நியாயமான வாடகை மற்றும் குத்தகை நிர்ணயிக்கிறோம் என்கிற பெயரில் பல மடங்கு வாடகை உயர்த்தப்பட்டிருக்கிறது. பயனாளி கள் கட்ட முடியாத அளவிற்கு 10 மடங்கு வாடகை உயர்த்தப்பட்டிருக் கிறது. பயனாளிகள் சார்பில் அரசுக்கு பல கட்டங்களில் தொடர்ந்து வாடகை குறைக்க வலியுறுத்தி கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரை யும் நேரில் சந்தித்தும் வலியுறுத்தி யுள்ளனர். உதாரணத்திற்கு, 2016 இல் 2095 சதுர அடிக்கு ரூ. 4500 ஆக இருந்த வாடகை தற்போது ரூ. 43,875 என உயர்த்தப் பட்டிருக்கிறது. அதேபோல, அரசாணை 298/10 இன் படி 246 சதுர அடி மனைக்கு ரூ. 792 ஆக இருந்த வாடகை யை தற்போது ரூ. 7920 ஆக கட்டச் சொல்லி, இந்து சமய அறநிலையத் துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது. அது மட்டுமல்ல, இந்த வாடகையை 2016 ஆம் ஆண்டிலிருந்தே முன் தேதியிட்டு கட்ட வேண்டும் என நிர்ப்பந்தம் செய் யப்படுகிறது.
தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய கட்டளைகள் சட்டம் 1959 இன் படி தற்போதைய சந்தை மதிப்புக்கு வாடகை கட்டணம் வசூ லிக்க வேண்டுமென்று சட்டம் சொல்லு கிறது. ஆனால் இந்து சமய அறநிலை யத்துறை வழிகாட்டி மதிப்பின் அடிப் படையில் வாடகை கட்டணம் நிர்ணயிக் கப்படுகிறது. ஆகவே, இவைகள் அனைத்தையும் ரத்து செய்து, எளிய முறையில் வாடகை கட்டணம் நிர்ண யிக்க வேண்டும்”என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு,“வாடகை கட்டணம் 2011 ஆம் ஆண்டின் உத்தரவுப்படி வசூலிக்கப்படுகிறது. குடியிருப் போருக்கு எந்த வகையிலும் தொல்லை கள் கொடுக்கவில்லை. பாரபட்சமும் காட்டப்படவில்லை. வாடகைதாரர்கள் கொடுக்கும் தொகையைத்தான் பெற்று வருகிறோம். இந்த கட்டணத்தை முறைப்படுத்தி சீர்படுத்த தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலை மையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள் ளது. அந்த குழு கடந்த 8 மாதமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. வெகு விரைவில் அரசுக்கு அறிக்கை கொடுத்ததும் வாடகை ஏற்றமும் இறக்கமும் இல்லாமல் முடிவுக்கு கொண்டுவரப்படும்”என்றார்.