tamilnadu

img

நள்ளிரவில் ஆவின் வேனை நிறுத்தி அமைச்சர் நாசர் திடீர் ஆய்வு

சென்னை, ஏப். 17- கொரட்டூரில் ஆவின் பால் வண்டியை வழிமறித்து அமைச்சர் சாமு. நாசர் நள்ளிரவில் தீடீர் ஆய்வு மேற்கொ ண்டார். இதில் 2,484 ரூபாய் மதிப்புள்ள 107 பால் பாக்கெட்டுகள் கூடுதலாக எடுத்து வரப்பட்டது அப்போது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பால் பண்ணைகளில் ஆய்வு நடத் தப்படும் என்று அமைச்சர் தெரி வித்துள்ளார். அம்பத்தூர் தொழிற் பேட்டை அருகே உள்ள கொரட்டூர் ஆவின் பால் பண்ணைக்கு தமிழ கத்தின் தென் மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், தர்மபுரி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி புரம், கடலூர், விழுப்புரம், செஞ்சி, திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினசரி 4 லட்சம் லிட்டர் பால் வாடகை  வாகனம் மூலம் கொள்முதல் செய்யப் படுகிறது. பின்னர்  பால் மொத்தமாக பதப்படுத்தப்பட்டு நிலைப்படுத் தப்படுகிறது. அவ்வாறு பேக்கிங் செய்ய ப்படும் பால் பாக்கெட்டுகள் சுமார் 85 வாக னங்களில் அம்பத்தூர், ஆவடி, முகப்பேர், பாடி, கொளத்தூர்,

வில்லி வாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம். அவ்வாறு பாலை ஏற்றி செல்லும் வேனை சனிக்கிழமை (ஏப். 16) நள்ளிரவு கொரட்டூர் அருகே பால்வ ளத்துறை அமைச்சர் நாசர் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, ஒரு வாக னத்தில், 107 பால் பாக்கெட்டுகள் கூடு தலாக எடுத்து செல்லப்பட்டது கண்டறி யப்பட்டது. இதன் மதிப்பு 2,484 ரூபா யாகும் . இதுதொடர்பாக  அமைச்சர் கூறுகை யில், அம்பத்தூர் பண்ணையில் இருந்து சுமார் 85 லோடு வாகனங்கள் மூலம் பால் விநியோகம் செய்யப்படுகிறது.  வாக னங்களில் கூடுதலாக பால் பாக்கெட் எடுத்து செல்லப்படுவது குறித்து அடிக்கடி ஆய்வு செய்யப்படும் என்றார். மேலும் இதேபோல் தமிழகம் முழு வதும் உள்ள ஆவின் பால் பண்ணை களில் தொடர்ந்து ஆய்வு மே ற்கொள்ளப்படும் என்றும், கூடுதலாக பால் பாக்கெட் எடுத்துச் செல்பவர்கள், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர்  நாசர் கூறினார்.