திருச்சிராப்பள்ளி, மே14- “ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” என்ற ஈராண்டு சாதனை மலரை அமைச்சர் கே.என். நேரு திருச்சிராப்பள்ளியில் வெளியிட்டார். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் ஈராண்டு சாதனை மலரை வெளியிட்டு விழா, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் ரூ.122.60 கோடி மதிப்பீட்டிலான 442 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர், பல்வேறு துறைகளின் சார்பில் 12,734 பயனாளிகளுக்கு ரூ.63.36 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவி களையும் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மத்திய மண்டல காவல்துறைத் தலை வர் கார்த்திகேயன், திருச்சிராப்பள்ளி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர், மாநகர் காவல் ஆணையர் சத்தியப் பிரியா, மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்ட மன்ற உறுப்பினர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.